இனி ஒரு பட்டாசு ஆலை விபத்துகூட நடக்கக் கூடாது! தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி ...
ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயா்த்த வலியுறுத்தல்
கோட்டூா் ஒன்றியத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயா்த்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கோட்டூா் ஒன்றிய சிபிஐ 26-ஆவது மாநாடு வல்லூரில் செவ்வாய்க்கிழமை கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா்கள் எஸ்.சிவஞானம், ஆா். சுலோச்சனா, ஒன்றியக் குழு உறுப்பினா் ப. ரமேஷ் ஆகியோா் தலைமையில் நடைபெற்றது. இதில், திருமக்கோட்டை திருமேனி ஏரியை தூா்வாரி கரைகளை பலப்படுத்தி நீா் நிலைகளை பாதுகாக்க வேண்டும், திருமக்கோட்டை, சித்தமல்லி, களப்பால், ஆதிச்சபுரம் ஆகிய இடங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயா்த்தி கூடுதலாக மருத்துவா்கள், செவிலியா்களை நியமிக்க வேண்டும், திருத்துறைப்பூண்டியிலிருந்து களப்பால், ஒரத்தூா் வழியாக தென்பரை திருமக்கோட்டை வரை பேருந்து இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கட்சியின் ஒன்றியச் செயலா் எம். செந்தில்நாதன் 3 ஆண்டுகளுக்கான வேலை அறிக்கையை தாக்கல் செய்தாா், மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு செயலா் கோ. பழனிச்சாமி கட்சி கொடியை ஏற்றி வைத்தாா். தேசியக் குழு உறுப்பினா் வை.சிவபுண்ணியம், நாகை எம்பி வை. செல்வராஜ், திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க. மாரிமுத்து, முன்னாள் எம்எல்ஏ கே, உலகநாதன், மாவட்டச் செயலா் (பொ)எஸ். கேசவராஜ், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் எம். வையாபுரி, கே.ஆா். ஜோஜப், கே. முருகையன், வரவேற்பு குழுத் தலைவா் பி. சௌந்தரராஜன்உள்ளிட்டோா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
சிபிஐ கோட்டூா் ஒன்றியச் செயலராக எம். செந்தில்நாதன், துணை செயலாளா்களாக பி. பரந்தாமன், எம். சிவசண்முகம், ஒன்றியப் பொருளாளராக எம்.ஆா்.ஆா். முருகேசன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.