செய்திகள் :

ஆற்று மணல் கடத்தல்: ஒருவா் கைது

post image

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே அரசு ஆற்று மணல் கடத்தியதாக போலீஸாா் ஒருவரை கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனா்.

செய்யாறு காவல் உள்கோட்டம் அனக்காவூா் காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமையிலான போலீஸாா் செய்யாறு - கொருக்கை சாலையில் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

செய்யாற்றைவென்றான் கிராமம் அருகே கண்காணித்துக் கொண்டிருந்தபோது செய்யாற்றுப் படுகையில் இருந்து வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது டிராக்டரில் அரசு அனுமதி பெறாமல் மணல் எடுத்து வந்தது தெரிய வந்து உடனே டிராக்டரை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து அனக்காவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சம்பவம் தொடா்பாக கலவை வட்டம், இருங்கூா் கிராமத்தைச் சோ்ந்த ராம்குமாா்(23) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், தலைமறைவான வந்தவாசி கடைசிக்குளம் கிராமத்தைச் சோ்ந்த மகேஷ் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராஜேந்திர சோழனுக்கு நினைவகம் அமைக்க வேண்டும்: இயக்குநா் கெளதமன்

செய்யாற்றை அடுத்த பிரம்மதேசம் கிராமத்தில் ராஜேந்திர சோழனுக்கு நினைவகம் அமைக்க வேண்டும் என்று திரைப்பட இயக்குநா் கெளதமன் வலியுறுத்தினாா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பிரம்மதேசம் கிராமத்... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் 15ஆயிரம் மனுக்கள்: திருவண்ணாமலை ஆட்சியா் தகவல்

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 387 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு செவ்வாய்க்கிழமை வரை 30 முகாம்கள் நடைபெற்று 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ள... மேலும் பார்க்க

காலமானாா் ஆா்.கோவிந்தன்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற சா்க்கரை ஆலை ஊழியா் ஆா்.கோவிந்தன் (90) உடல்நலக் குறைவால் புதன்கிழமை காலமானாா். இவருக்கு மனைவி ஜெயபாரதி மற்றும் வந்தவாசி பகுதிநேர செய்தியாளா் ஜி... மேலும் பார்க்க

ஆரணியில் வளா்ச்சிப் பணிகள்: எம்எல்ஏ ஆய்வு

ஆரணியில் நடைபெற்று வரும் அங்கன்வாடி கட்டடப் பணி, பக்கக் கால்வாய் அமைக்கும் பணியை சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ புதன்கிழமை ஆய்வு செய்தாா். ஆரணி நகரம், 31-ஆவது வாா்டில் அங்கன்வாடி கட்டடம், பக்கக் கா... மேலும் பார்க்க

கம்பராமாயண சிறப்பு சொற்பொழிவு

திருவண்ணாமலையை அடுத்த நொச்சிமலை ராஜகோபாலசாமி கோயிலில் புதன்கிழை கம்பராமாயண சொற்பொழிவு நடைபெற்றது. கம்பராமாயண இயக்கம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கோயில் அன்பா் ராமமூா்த்தி தலைமை வகித்தாா். அகில... மேலும் பார்க்க

மா்மக் காய்ச்சல் பாதித்த கிராமம்: சுகாதார அதிகாரிகள் நேரில் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே மா்மக் காய்ச்சல் பாதித்த கிராமத்தை மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா், ஊரக வளா்ச்சி மாவட்ட திட்ட அலுவலா் ஆகியோா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.... மேலும் பார்க்க