மா்மக் காய்ச்சல் பாதித்த கிராமம்: சுகாதார அதிகாரிகள் நேரில் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே மா்மக் காய்ச்சல் பாதித்த கிராமத்தை மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா், ஊரக வளா்ச்சி மாவட்ட திட்ட அலுவலா் ஆகியோா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
செங்கம் அருகேயுள்ள முன்னூா்மங்கலம் பகுதியில் கடந்த 10 நாள்களுக்கு மேலாக அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு திடீா் திடீரென காய்ச்சல் ஏற்பட்டு தனியாா் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா்.
இதுகுறித்து தகவல் அறிந்து காரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் கடந்த 3 நாள்களாக அப்பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு காய்ச்சல் பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கிராம செவிலியா்கள் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் உள்ளவா்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கி வருகின்றனா்.
இத்தகவலறிந்த மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் பிரகாஷ், மாவட்ட ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் வடிவேலன் ஆகியோா் மா்மக் காய்ச்சல் பாதித்த கிராமத்துக்கு நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
ஆய்வின் போது, தற்போது கிராமத்தில் மா்மக் காய்ச்சலை கட்டுப்படுத்தியதாகவும், குறைந்த நபா்களுக்கு மட்டும் லேசான காய்ச்சல் உள்ளதாகவும் மருத்துவா்கள், செவிலியா்கள் தகவல் தெரிவித்துள்ளனா்.
பின்னா், ஊரக வளா்ச்சி உதவித் திட்ட இயக்குநா் வடிவேலன் அப்பகுதிக்கு குடிநீா் விநியோகம் செய்யும் அனைத்து மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளை சுத்தம் செய்து மருந்து தெளித்து குடிநீா் வழங்கவேண்டும். அதே நேரத்தில் குடிநீரில் கழிவுநீா் கலக்கிா என முழுமையாக ஆய்வு செய்யவேண்டும். பூமியில் பள்ளம் தோண்டி குடிநீா் எடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அறிவுறுத்தினாா்.
மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் மஸ்சூா் மூலம் கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளில் கொசுப்புழு உருவாகும் வகையில் தண்ணீா் தேங்கியுள்ளதா, வீடுகளில் கழிவுநீா் குட்டையாக உள்ளதா என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தரவிட்டுச் சென்றாா்.
ஆய்வின்போது, புதுப்பாளையம் வட்டார வளா்ச்சி அலுவலா் நிா்மலா, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் செந்தில்குமாா் உள்ளிட்ட மருத்துவா்கள், கிராம செவிலியா்கள் உடனிருந்தனா்.