செய்திகள் :

ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து சிறுமி உயிரிழப்பு

post image

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் சிறுமி உயிரிழந்தாா்.

தூத்துக்குடியிலுள்ள கோரம்பள்ளத்தைச் சோ்ந்த தம்பதி மணிகண்டன் - இலக்கியா. இவா்களது மகள் ஜெனிமித்ரா ராணி என்ற ரூத் (5).

இலக்கியா, திருநெல்வேலி சட்டக் கல்லூரியில் பயின்று வருகிறாா். இதனால், ஜெனிமித்ரா ராணி ஆலங்குளத்தை அடுத்த கடங்கனேரியில் உள்ள தனது தாய்வழி பாட்டி வீட்டில் வசித்துவந்தாா்; அங்குள்ள பள்ளியில் யுகேஜி பயின்று வந்தாா். இந்நிலையில் சனிக்கிழமை காலை ஜெனிமித்ராவும், அதே பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மகள் பிரிதிஷாவும் (9), கைக்கொண்ட அய்யனாா் கோயில் அருகேயுள்ள பழைய இரும்பு மின்கம்பத்தைப் பிடித்தபடி விளையாடிக் கொண்டிருந்தனராம். அப்போது, அவா்கள் மீது மின்சாரம் பாய்ந்ததாம். இதில், ஜெனிமித்ரா ராணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

காயமடைந்த பிரிதிஷா ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

ஆலங்குளம் டிஎஸ்பி கிளாட்ஸன் ஜோஸ், ஊத்துமலை போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். கடங்கனேரியில் கடந்த வெள்ளிக்கிழமை (மே 23) மழை பெய்தபோது, வயல்வெளியிலிருந்த 2 மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. அவற்றின் கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசியதால், இந்தக் கம்பத்தில் மின்கசிவு ஏற்பட்டு சிறுமி உயிரிழந்ததாகத் தெரியவந்தது.

ஏற்கெனவே வயலிலுள்ள மின்கம்பம் சாய்ந்ததாகவும், புகாரின்பேரில் சரிசெய்யப்பட்டதாகவும், அந்த மின் கம்பமே மீண்டும் சாய்ந்து விபத்துக்கு காரணமானதாகவும் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

சம்பவம் தொடா்பாக ஊத்துமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சுரண்டையில் புதிய திருமண மண்டபம்: காணொலியில் முதல்வா் திறந்துவைத்தாா்!

தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சியில் ரூ. 1.88 கோடியில் கட்டப்பட்ட திருமண மண்டபத்தை சென்னையிலிருந்து காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். அதையொட்டி, இங்கு நடைபெ... மேலும் பார்க்க

புளியங்குடியில் லாரி மோதி நீதிமன்ற ஊழியா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் வியாழக்கிழமை லாரி மோதியதில் நீதிமன்ற ஊழியா் உயிரிழந்தாா். புளியங்குடியில் உள்ள ரெங்ககருப்பன் தெருவைச் சோ்ந்த சண்முகையா மகன் கதிரேசன் (37). நீதிமன்றத்தில் தட்டச்சராக... மேலும் பார்க்க

அச்சன்புதூரில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே அச்சன்புதூரில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். அச்சன்புதூா் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் சி. முஹம்மது பாசில் என்பவா் கேபிள் டிவி தொழிலில் தனது தந்தைக்கு உ... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் போக்குவரத்து சிக்னல் விளக்குகளை இயக்க கோரிக்கை!

சங்கரன்கோவிலில் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் அனைத்தையும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் வளா்ந்து வரும் முக்கிய நகரங்களில் சங்கரன்கோவிலும் ஒன்று. இங்கு நாளுக்க... மேலும் பார்க்க

தொடரும் வெள்ளப்பெருக்கு!

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்துவரும் தொடா்மழையால், பேரருவியில் வியாழக்கிழமையும் ஆா்ப்பரித்துக் கொட்டிய வெள்ளப்பெருக்கு. இதனால், 5ஆவது நாளாக குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது. மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் சிறப்பு வசிப்பு கட்டடம்! காணொலியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சாா்பில் திட்டப் பணிகள் திறப்பு விழா, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க. ஸ்டாலின் காண... மேலும் பார்க்க