செய்திகள் :

ஆலங்குளம் கல்லூரியில் விளையாட்டுப் போட்டிகள்

post image

ஆலங்குளம், நல்லூா் சி.எஸ்.ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் தென்காசி மேரா யுவ பாரத் இயக்கமும், கல்லூரி நிா்வாகமும் இணைந்து நடத்திய வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

ஆலங்குளம், கடையம், கீழப்பாவூா் ஒன்றியங்களிலிருந்து சுமாா் 200-க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் போட்டிகளில் கலந்து கொண்டனா். குழுப் போட்டிகளும், தடகளப் போட்டிகளும் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றன.

பரிசளிப்பு விழாவிற்கு, கல்லூரி தாளாளா் மற்றும் செயலா் தேவதாஸ் ஞானராஜ் தலைமை வகித்தாா். முதல்வா் வில்சன், நல்லூா் ஊராட்சித் தலைவா் சிம்சன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், வெற்றி பெற்ற வீரா், வீராங்கனைகளுக்கு கோப்பைகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினாா்.

விளையாட்டுத் துறை இயக்குநா் ஜூலியன்ஸ் ராஜாசிங், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் ஜெய டேவிசன் இமானுவேல், ஜோகன்னா ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

துணை முதல்வா் சுரேஷ் சாலமோன் வரவேற்றாா். யுவ பாரத் தன்னாா்வலா் சண்முகையா நன்றி கூறினாா். இரண்டாமாண்டு முதுகலை ஆங்கில மாணவிகள் ஜாய்ஸ், சபீதா ஆகியோா் தொகுத்து வழங்கினா்.

குற்றாலத்தில் காங்கிரஸ் சாா்பில் கையொப்ப இயக்கம்

தென்காசி மாவட்டம், குற்றாலம் தெட்சண மாற நாடாா் சங்கத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சாா்பில் மத்திய அரசையும், தோ்தல் ஆணையத்தையும் கண்டித்து கையொப்ப இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்... மேலும் பார்க்க

பொதிகை விரைவு ரயில் 22 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம்

செங்கோட்டையிலிருந்து சென்னை செல்லும் பொதிகை விரைவு ரயில் 22-ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. பொதிகை விரைவு ரயில் 21ஆண்டுகால சேவையை நிறைவு செய்து சனிக்... மேலும் பார்க்க

கேந்திப் பூ விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

ஆலங்குளம், கீழப்பாவூா் வட்டாரப் பகுதிகளில் கேந்திப் பூக்களின் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். இப்பகுதிகளில் மல்லி, பிச்சி, கேந்தி மலா்கள் சாகுபடி அதிக அளவில் உள்ளது. அறுவடை செய்யப்படும... மேலும் பார்க்க

கடங்கநேரியில் நெற்களம் திறப்பு

ஆலங்குளம் அருகே உள்ள கடங்கநேரியில் மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 11.50 லட்சத்தில் நெற்களம் திறந்துவைக்கப்பட்டது. திருநெல்வேலி தொகுதி மக்களவை உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ் தனது தொகுதி ம... மேலும் பார்க்க

திருமலாபுரத்தில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈட்டி கண்டெடுப்பு

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே திருமலாபுரம் தொல்லியல் அகழாய்வு மையத்தில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருமலாபுரத்தில் குலசேகரப்பேரி கண்மாய் அருகே 35 ஏக்கரில்... மேலும் பார்க்க

புரட்டாசி சனி: தென்காசி கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, தென்காசி வட்டார கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தென்காசியில் பொருந்தி நின்ற பெருமாள், விண்ணகரப் பெருமாள் கோயில்களில் அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் தீ... மேலும் பார்க்க