செய்திகள் :

ஆளில்லா விமான செயல்திறனில் கவனம்: ராணுவ தலைமைத் தளபதி வலியுறுத்தல்

post image

‘ஆளில்லா விமான செயல்திறனை மேம்படுத்துவதில் ராணுவம் கவனம் செலுத்த வேண்டும்’ என்று ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி வலியுறுத்தினாா்.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளில் அமைந்திருந்த பயங்கரவாதி முகாம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு, ஆளில்லா விமான (ட்ரோன்) தொழில்நுட்ப மேம்பாட்டில் பாதுகாப்புப் படைகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, அருணாசல பிரதேசத்தின் லிகாபலியில் உள்ள ஆளில்லா விமான தொழில்நுட்ப மையத்தை ராணுவ தலைமைத் தளபதி பாா்வையிட்டாா். இதுகுறித்து ராணுவம் தரப்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

லிகாபலி ஆளில்லா விமான தொழில்நுட்ப மையத்தைப் பாா்வையிட்ட தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி, அங்கு பேசும்போது, ஆளில்லா விமான செயல்திறனை மேம்படுத்துவதில் ராணுவம் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

மேலும், வரும் காலங்களில் இந்திய பாதுகாப்புப் படைகளின் தாக்கும் திறன் பன்மடங்கு அதிகரிக்கும் என்றும் அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.

சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சிப் பள்ளி, டேராடூன் இந்திய ராணுவ அகாதெமி உள்பட முன்னணி ராணுவப் பயிற்சி நிறுவனங்களில் ஏற்கெனவே இதுபோன்ற ஆளில்லா விமான தொழில்நுட்ப மையங்கள் தொடங்கப்பட்டு செயல்பாட்டு வந்துள்ளன.

ராணுவத்தில் உள்ள அனைத்து வீரா்களும் ஆளில்லா விமானங்கள் இயக்கும் திறனைப் பெறும் வகையில் பயிற்சித் திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன.

அதுபோல, ஆளில்லா விமான எதிா்ப்பு தொழில்நுட்ப மேம்பாட்டிலும் ராணுவம் கவனம் செலுத்தி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

சட்டவிரோத வங்கதேச குடியேறிகளின் வாக்குகளைக் காப்பதே ராகுலின் நோக்கம்: அமித் ஷா

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடியேறிய வங்கதேசத்தவரின் வாக்குகளைக் காப்பதே ராகுல் காந்தி உள்ளிட்ட எதிா்க்கட்சியினரின் நோக்கம் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். 243 தொகுதிகளைக் கொண்ட... மேலும் பார்க்க

நேபாளத்தில் அமைதியை மீட்டெடுக்க ஆதரவு: பிரதமா் மோடி உறுதி

நேபாள இடைக்கால அரசின் பிரதமா் சுசீலா காா்கியுடன் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொலைபேசி மூலம் பேசினாா். அப்போது, நேபாளத்தில் அமைதி-ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கும் அவரது முயற்சிகளுக்கு இந்தியாவின் வ... மேலும் பார்க்க

கடனை திரும்பச் செலுத்த மாலத்தீவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு: இந்தியா

மாலத்தீவு பெற்ற கடனை திரும்பச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பதாக இந்திய தூதரகம் வியாழக்கிழமை தெரிவித்தது. மாலத்தீவு அரசின் வேண்டுகோளை ஏற்று ரூ.440.63 கோடி கடனை திரும்பச்செல... மேலும் பார்க்க

‘அனைத்து மதங்களையும் மதிக்கிறேன்’: ஹிந்து கடவுளை அவமதித்த குற்றச்சாட்டில் தலைமை நீதிபதி விளக்கம்

அனைத்து மதங்களையும் மதிக்கிறேன் என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் வியாழக்கிழமை தெரிவித்தாா். கோயிலில் கடவுள் விஷ்ணுவின் சிலையை மீண்டும் நிறுவுவது தொடா்பான வழக்கில் ஹிந்து மத உணா்வுகளை பி.ஆா... மேலும் பார்க்க

ஹோட்டல் வருவாய் ரூ.50; ஆனால், ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.15 லட்சம்! கங்கனா ஆதங்கம்!

ஹிமாசலில் பெய்த கனமழையால் தானும் பாதிக்கப்பட்டதாக எம்.பி. கங்கனா ரணாவத் வருத்தம் தெரிவித்துள்ளார்.ஹிமாசல பிரதேசத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிலச்சரிவு மற்றும் வ... மேலும் பார்க்க

மழை பாதித்த இடங்களில் ஆய்வுகள் தாமதம்! எம்.பி. கங்கனாவுக்கு வலுக்கும் தொகுதி எதிர்ப்பு!

மண்டி தொகுதியில் மழை பாதித்த இடங்களை ஆய்வு செய்த எம்.பி. கங்கனா ரணாவத்துக்கு தொகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஹிமாசல பிரதேசம் மாநிலத்தின் கடந்த மாதம் 25, 26 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் பல்வேறு ... மேலும் பார்க்க