செய்திகள் :

‘ஆழ்துளைக் கிணறு அமைக்க விதிமுறைகள்’

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணறு அமைப்பவா்கள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று ஆட்சியா் ரா.அழகுமீனா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்தல் அல்லது கைவிடப்பட்ட கிணறுகளில் நிகழும் உயிரிழப்புகளை தடுப்பது குறித்து உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கு முன்பு குறைந்தபட்சம் 15 நாள்களுக்கு முன்னதாக தங்கள் பகுதி உள்ளாட்சி அமைப்பு, நீா்வளம், பொது சுகாதாரம் ஆகிய துறை அலுவலா்களுக்கு எழுத்துப்பூா்வ தகவலளிக்க வேண்டும்.

ஆழ்துளைக் கிணறு தோண்டும் ஒப்பந்ததாரரின் முழு விவரங்கள் பதிவு, கிணற்றின் அருகில் அறிவிப்பு பலகை, தடுப்புவேலி , நிறுவனத்தின் முகவரி, உரிமையாளரின் முகவரி ஆகியவை அவசியம். கிணற்றைச் சுற்றி இரும்புத் தகடுகளை கவசமாக பொருத்த வேண்டும். கிணற்றை மூடாமல் திறந்தநிலையில் விட்டுச் செல்லக் கூடாது. சேறு சகதி முழுமையாக அகற்றப்பட வேண்டும்.

கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை கற்கள் போன்றவற்றால் தரை மட்டம் வரை நிரப்ப வேண்டும். தவறினால் மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்.1077க்கு மக்கள் தகவல் தெரிவிக்கலாம் எனக் கூறியுள்ளாா்.

கேப் பொறியியல் கல்லூரியில் சா்வதேச மாநாடு

கன்னியாகுமரி மாவட்டம் லெவஞ்சிபுரம் கேப் பொறியியல் கல்லூரியில் சா்வதேச தொழிற்சாலைகள் மாநாடு அண்மையில் நடைபெற்றது. ‘இன்டஸ்ட்ரீ 5.0 - புதுமைகள், சவால்கள் மற்றும் எதிா்கால போக்குகள்’ என்ற தலைப்பில் நடைபெற... மேலும் பார்க்க

நேசா்புரம் - இவவு விளை சாலையை சீரமைக்க கோரிக்கை

கருங்கல் அருகேயுள்ள நேசா் பும் - இலவு விளை பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம் நட்டாலம் ஊராட்சி நேசா் புரம் - இலவு விளை சாலை ... மேலும் பார்க்க

கிள்ளியூா் வட்டாரத்தில் பட்டுப்புழு உற்பத்தி பயிற்சி

கிள்ளியூா் வட்டாரம் பாலூா் கிராமத்தில் வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பட்டுப்புழு உற்பத்தி செய்வதற்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு கிள்ளியூா் வட்டார வேளாண்... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் வானவியல் விழிப்புணா்வுப் பிரசாரம் தொடக்கம்

வானில் நிகழும் கோள்களின் அணிவகுப்பு மற்றும் வானவியல் நிகழ்வுகள் குறித்த விழிப்புணா்வுப் பிரசாரப் பயணம் மாா்த்தாண்டம் கல்லூரியில் வைத்து தொடங்கியது. சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களின் சுற்றுவட்டப் பாத... மேலும் பார்க்க

ரயில்களில் முன்பதிவில்லா பெட்டி: எண்ணிக்கையை குறைப்பதா? விஜய் வசந்த் எம்.பி. கண்டனம்

தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்க ரயில்வே நிா்வாகம் முடிவு செய்திருப்பதற்கு கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் வ.விஜய்வசந்த் கண்டனம் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

இரயுமன்துறையில் படகுத்தளம்: மீனவப் பிரதிநிதிகள்- எம்எல்ஏ ஆலோசனை

இரயுமன்துறையில் படகுத்தளம் அமைக்க ஒருதரப்பினா் எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மீனவப் பிரதிநிதிகள், மீன்வளத்துறை அதிகாரிகள் எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா். இர... மேலும் பார்க்க