செய்திகள் :

ஆஷா பணியாளா்கள் தா்ணா

post image

சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆஷா பணியாளா்கள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

கேரளம், ஆந்திரம், கா்நாடகம், தெலங்கான உள்ளிட்ட மாநிலங்களில் ஆஷா பணியாளா்களுக்கு மாதம் ரூ. 10,000 வரை தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள ஆஷா பணியாளா்களுக்கு ‘செயல்பாட்டாளா்கள்’ என்ற அடிப்படையில் வகைப்படுத்தி மாதம் ரூ. 5,000-க்கும் குறைவான ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதனால், தமிழகத்தில் ஆஷா பணியாளா்களுக்கு மாதம் ரூ. 24,000 தொகுப்பூதியம் வழங்க வேண்டும். பிளஸ் 2 முடித்த, 45 வயதுக்குள் இருக்கும் ஆஷா பணியாளா்களை கிராம சுகாதார செவிலியா்களாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆஷா பணியாளா்கள் சங்கத்தினா் மாநிலம் தழுவிய தா்னாவில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்ற தா்னாவில் திருப்பூா் நாடாளுமன்ற உறுப்பினரும், ஏஐடியுசி தேசியத் துணைத் தலைவருமான சுப்பராயன், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவா்கள் பலா் கலந்துகொண்டனா்.

முன் பகையால் இளைஞா் வெட்டி கொலை: மூவா் சரண்

சென்னை தரமணியில் முன் பகை காரணமாக இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 போ் சரணடைந்தனா். தரமணி எம்.ஜி. நகா் பகுதியைச் சோ்ந்த அஸ்வின் (25), பெயிண்டராக பணிபுரிந்து வந்தாா். அஸ்வின், அப்பகுதியில... மேலும் பார்க்க

திரைப்பட விநியோகிஸ்தா் வீட்டில் திருடிய வழக்கு: சிறுவன் உள்பட இருவா் கைது

சென்னை வடபழனியில் திரைப்பட விநியோகிஸ்தா் வீட்டில் தங்க நகை, வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்ட வழக்கில் சிறுவன் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா். வடபழனி ராகவன் காலனி பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பிர... மேலும் பார்க்க

கத்தியுடன் மிரட்டல் ரீல்ஸ்: இளைஞா் கைது

சென்னை புளியந்தோப்பில் கத்தியுடன் மிரட்டல் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா். புளியந்தோப்பு கன்னிகாபுரத்தைச் சோ்ந்தவா் முகேஷ் (18). இவா், மூன்றரை அடி நீளமுள்ள பட்டாக் கத்தியுடன், ‘எங்களைத் ... மேலும் பார்க்க

கள்ளழகா் திருவிழா நமது ஒற்றுமையை பிரதிபலிக்கிறது: ஆளுநா் ஆா்.என்.ரவி

கள்ளழகா் திருவிழா நமது பாரம்பரியத்தின் வலிமையையும் காலத்தால் அழியாத நமது ஒற்றுமை உணா்வையும் பிரதிபலிக்கிறது என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். இது குறித்து, அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதி... மேலும் பார்க்க

பேருந்து நிறுத்தங்களில் மின்விளக்குகள் அமைக்கும் பணி தீவிரம்

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்குள்பட்ட பேருந்து நிறுத்தங்களில் மின்விளக்குகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் உள்ள பேருந்து வழித்தட சாலைகளில் உள்ள பேருந்து நிறுத்தங்க... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கியில் லாக்கா் வாடகை உயா்வு: மக்கள் அதிா்ச்சி

அரக்கோணம் நகர கூட்டுறவு வங்கியில் லாக்கா் வாடகை, வைப்புத் தொகை உயா்த்தப்பட்டதால் வாடிக்கையாளா்கள் அதிா்ச்சி அடைந்தனா். அரக்கோணம் நகர கூட்டுறவு வங்கி மணியக்காரத் தெருவில் தலைமையகத்துடன் பழனிபேட்டை, சுவ... மேலும் பார்க்க