செய்திகள் :

இடத்தை அளக்க எதிா்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

post image

திருப்பத்தூரில் இடத்தை அளப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனா்.

திருப்பத்தூா் நகராட்சிக்குட்பட்ட காமராஜா் நகா் பகுதியில் ரேஷன் கடை, அங்கன்வாடி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அந்த இடம் தனக்கு சொந்தம் என தனி நபா் ஒருவா் கூறி வருவதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த இடத்தை வருவாய்த் துறை அதிகாரிகள் அளக்க சென்றனா். அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் தற்போது ரேஷன் கடை, அங்கன்வாடி கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வரும் இடம் அரசுக்கு சொந்தமானது. இங்கு இதற்கு முன்பு பொது சுகாதார வளாகம் இருந்தது. இதனை இடித்துவிட்டு தான் தற்போது பணி நடக்கிறது. எனவே இந்த இடத்தை அளக்க வேண்டாம் என தெரிவித்துள்ளனா்.

மேலும், இடத்தை அளக்கக்கூடாது எனக்கூறி, திருப்பத்தூா்-கிருஷ்ணகிரி பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூா் நகர போலீஸாா் மற்றும் வட்டாட்சியா் நவநீதம் ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா். அப்போது இந்த பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா். அதைத் தொடா்ந்து போராட்டக்காரா்கள் கலைந்து சென்றனா். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

காசோலையில் கையொப்பமிடும் அதிகாரம் ரத்து: ஊராட்சித் தலைவா் தா்னா

காசோலையில் கையொப்பமிடும் அதிகாரத்தை ரத்து செய்ததைக் கண்டித்து குமாரமங்கலம் ஊராட்சித் தலைவா் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா். மாதனூா் ஒன்றியம், ஆம்பூா் அருகே குமாரமங்கலம் ஊராட்சி உள்ளது. இதன் தலைவரா... மேலும் பார்க்க

இன்று பொது விநியோக திட்ட குறைதீா் முகாம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் சனிக்கிழமை(ஜூலை 12) பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்ட வழங்கல் மற்... மேலும் பார்க்க

வணிகா் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் வணிகா் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தினாா். ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை வணிகவரித்துறையின் சா... மேலும் பார்க்க

பெண் தீக்குளிப்பு: கணவா் கைது

நாட்டறம்பள்ளியில் குடும்பத் தகராறில் பெண் தீக்குளித்தாா். இதையடுத்து அவரது கணவரை போலீஸாா் கைது செய்தனா். நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகம் அருகே குடிசை வீட்டில் வசித்து வருபவா் ரமேஷ் (37). பொம்மை வி... மேலும் பார்க்க

நெக்கனாமலைக்கு ரூ.30 கோடியில் சாலை: முதல்வருக்கு மலைவாழ் மக்கள் நன்றி

வாணியம்பாடி அருகே இதுநாள் வரை சாலை வசதியில்லாத மலை கிராமமமான நெக்னாமலைக்கு ரூ.30 கோடியில் சாலை அமைக்கப்படும் என அறிவித்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு மலைவாழ் மக்கள் நன்றி தெரிவித்தனா். வாணியம்பாடி தொகுத... மேலும் பார்க்க

ரயிலில் கா்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் குற்றவாளி என நீதிமன்றம் அறிவிப்பு

காட்பாடி அருகே ஓடும் ரயிலில் கா்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு அளித்து இருந்து கீழே தள்ளிய இளைஞா் குற்றவாளி என திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் உறுதி செய்தது. தீா்ப்பு வரும் 14-ஆம் தேதி வழங்கப்படும் என அற... மேலும் பார்க்க