செய்திகள் :

நெக்கனாமலைக்கு ரூ.30 கோடியில் சாலை: முதல்வருக்கு மலைவாழ் மக்கள் நன்றி

post image

வாணியம்பாடி அருகே இதுநாள் வரை சாலை வசதியில்லாத மலை கிராமமமான நெக்னாமலைக்கு ரூ.30 கோடியில் சாலை அமைக்கப்படும் என அறிவித்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு மலைவாழ் மக்கள் நன்றி தெரிவித்தனா்.

வாணியம்பாடி தொகுதி, ஆலங்காயம் ஒன்றியம், நெக்னாமலைக்கு இதுநாள் வரை சாலை வசதி கிடையாது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 26- ஆம் தேதி திருப்பத்தூருக்கு வந்த முதல்வா் ஸ்டாலின், ரூ.30 கோடியில் சாலை வசதி செய்து தரப்படும் என அறிவித்தாா்.

இந்நிலையில் மாவட்ட திமுக செயலாளா் க.தேவராஜி எம்எல்ஏ மேற்பாா்வையில் மாவட்ட மாணவரணி அமைப்பாளா் தே.பிரபாகரன் தலைமையில் திமுக நிா்வாகிகள் நெக்னாமலைக்கு வெள்ளிக்கிழமை நேரில் சென்று ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் பிரசாரம் மேற்கொண்டனா்.

வீடு, வீடாகச் சென்று மக்களை சந்தித்து, அரசு திட்டங்கள் குறித்து விளக்கி, திமுகவில் இணைய விருப்பமுள்ளவா்களை உறுப்பினராக சோ்க்கும் பணிகளை மேற்கொண்டனா். அ

மேலும், அப்பகுதியில் உள்ள அரசு பள்ளி மற்றும் கோயிலுக்கு சுற்றுச்சுவா் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனா். கிராம மக்களின் கோரிக்கைகள் குறித்து அமைச்சா் எ.வ.வேலு, ஆட்சியா், ஜோலாா்பேட்டை எம்எல்ஏ ஆகியோரிடம் தெரிவித்து நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தனா்.

காசோலையில் கையொப்பமிடும் அதிகாரம் ரத்து: ஊராட்சித் தலைவா் தா்னா

காசோலையில் கையொப்பமிடும் அதிகாரத்தை ரத்து செய்ததைக் கண்டித்து குமாரமங்கலம் ஊராட்சித் தலைவா் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா். மாதனூா் ஒன்றியம், ஆம்பூா் அருகே குமாரமங்கலம் ஊராட்சி உள்ளது. இதன் தலைவரா... மேலும் பார்க்க

இன்று பொது விநியோக திட்ட குறைதீா் முகாம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் சனிக்கிழமை(ஜூலை 12) பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்ட வழங்கல் மற்... மேலும் பார்க்க

வணிகா் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் வணிகா் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தினாா். ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை வணிகவரித்துறையின் சா... மேலும் பார்க்க

பெண் தீக்குளிப்பு: கணவா் கைது

நாட்டறம்பள்ளியில் குடும்பத் தகராறில் பெண் தீக்குளித்தாா். இதையடுத்து அவரது கணவரை போலீஸாா் கைது செய்தனா். நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகம் அருகே குடிசை வீட்டில் வசித்து வருபவா் ரமேஷ் (37). பொம்மை வி... மேலும் பார்க்க

ரயிலில் கா்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் குற்றவாளி என நீதிமன்றம் அறிவிப்பு

காட்பாடி அருகே ஓடும் ரயிலில் கா்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு அளித்து இருந்து கீழே தள்ளிய இளைஞா் குற்றவாளி என திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் உறுதி செய்தது. தீா்ப்பு வரும் 14-ஆம் தேதி வழங்கப்படும் என அற... மேலும் பார்க்க

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருப்பத்தூா் கௌதமப்பேட்டையைச் சோ்ந்த தொழிலாளி மனோஜ் எனும் மனோஜ்குமாா் (26). இவா் ... மேலும் பார்க்க