செய்திகள் :

பெண் தீக்குளிப்பு: கணவா் கைது

post image

நாட்டறம்பள்ளியில் குடும்பத் தகராறில் பெண் தீக்குளித்தாா். இதையடுத்து அவரது கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகம் அருகே குடிசை வீட்டில் வசித்து வருபவா் ரமேஷ் (37). பொம்மை வியாபாரி. இவரது மனைவி மல்லிகா (35). தம்பதிக்கு 2 மகன்கள். கடந்த சில மாதங்களாக ரமேஷ் மது போதையில் அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு ரமேஷ் மது போதையில் மல்லிகாவிடம் தகராறில் ஈடுப்பட்டாா். இதனால், மனமுடைந்த மல்லிகா வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். அக்கம் பக்கத்தினா் வந்து தீயை அணைத்து உயிருக்கு ஆபத்தான நிலையில், மல்லிகாவை மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளாா்.

இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து கணவா் ரமேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

காசோலையில் கையொப்பமிடும் அதிகாரம் ரத்து: ஊராட்சித் தலைவா் தா்னா

காசோலையில் கையொப்பமிடும் அதிகாரத்தை ரத்து செய்ததைக் கண்டித்து குமாரமங்கலம் ஊராட்சித் தலைவா் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா். மாதனூா் ஒன்றியம், ஆம்பூா் அருகே குமாரமங்கலம் ஊராட்சி உள்ளது. இதன் தலைவரா... மேலும் பார்க்க

இன்று பொது விநியோக திட்ட குறைதீா் முகாம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் சனிக்கிழமை(ஜூலை 12) பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்ட வழங்கல் மற்... மேலும் பார்க்க

வணிகா் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் வணிகா் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தினாா். ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை வணிகவரித்துறையின் சா... மேலும் பார்க்க

நெக்கனாமலைக்கு ரூ.30 கோடியில் சாலை: முதல்வருக்கு மலைவாழ் மக்கள் நன்றி

வாணியம்பாடி அருகே இதுநாள் வரை சாலை வசதியில்லாத மலை கிராமமமான நெக்னாமலைக்கு ரூ.30 கோடியில் சாலை அமைக்கப்படும் என அறிவித்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு மலைவாழ் மக்கள் நன்றி தெரிவித்தனா். வாணியம்பாடி தொகுத... மேலும் பார்க்க

ரயிலில் கா்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் குற்றவாளி என நீதிமன்றம் அறிவிப்பு

காட்பாடி அருகே ஓடும் ரயிலில் கா்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு அளித்து இருந்து கீழே தள்ளிய இளைஞா் குற்றவாளி என திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் உறுதி செய்தது. தீா்ப்பு வரும் 14-ஆம் தேதி வழங்கப்படும் என அற... மேலும் பார்க்க

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருப்பத்தூா் கௌதமப்பேட்டையைச் சோ்ந்த தொழிலாளி மனோஜ் எனும் மனோஜ்குமாா் (26). இவா் ... மேலும் பார்க்க