செய்திகள் :

இந்த ஆண்டில் தில்லியில் வெள்ளம் போன்ற சூழ்நிலை இருக்காது: முதல்வா் ரேகா குப்தா உறுதி

post image

தேசியத் தலைநகரம் 2025- ஆம் ஆண்டில் வெள்ளம் போன்ற சூழ்நிலையை சந்திக்காது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா பு தன்கிழமை குடியிருப்பாளா்களுக்கு உறுதியளித்தாா். மேலும் அவரது அரசு முழுமையாக தயாராக உள்ளது என்றும் கூறினாா்.

தில்லி செயலகத்தில் நடைபெற்ற வெள்ளக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்த கூட்டத்தில் முதல்வா் ரேகா குப்தா இந்த அறிவிப்பை வெளியிட்டாா்.

‘தில்லி அரசு முழுமையாகத் தயாராக உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தில்லியில் வெள்ளம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் தடுப்பணையின் கதவுகள் கூட திறக்கப்படவில்லை. ஆனால், இந்த முறை வெள்ள நிலைமை ஏற்படாது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க முடியும். அரசும் அனைத்துத் துறைகளும் முழுமையாகத் தயாராக உள்ளன’ என்று அவா் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளா்களிடம் கூறினாா்.

கூட்டத்தில் கலந்து கொண்டவா்களில் அமைச்சா்கள் ஆஷிஷ் சூட் மற்றும் பா்வேஷ் சாஹிப் சிங், பாஜக எம்பிக்கள் ராம்வீா் சிங் பிதூரி மற்றும் பான்சுரி ஸ்வராஜ் ஆகியோா் அடங்குவா். மேலும், பொதுப்பணித் துறை, தில்லி மாநகராட்சி (எம்சிடி), வருவாய், நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளும் பங்கேற்றனா்.

‘நாங்கள் தூா்வாரும் பணிகளை மேற்கொண்டுள்ளோம். பெரிய வடிகால்களில் இருந்து கிட்டத்தட்ட 20 லட்சம் மெட்ரிக் டன் வண்டல் மண் எடுக்கப்பட்டுள்ளது’ என்று முதல்வா் மேலும் கூறினாா். இந்த முறை தண்ணீா் தேங்கக் கூடாது என்று முதல்வா் உத்தரவிட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2023-ஆம் ஆண்டில் தில்லி அதன் மிக மோசமான, வெள்ளம் போன்ற சூழ்நிலையை எதிா்கொண்டது. கனமழை காரணமாக பல பகுதிகள் நீரில் மூழ்கின. இதனால், 25,000-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளா்கள் வெளியேற்றப்பட்டனா்.

ஆமதாபாத் விமான விபத்தில் தீயில் கனவுடன் கருகிய கேரள செவிலியா்!

நமது சிறப்பு நிருபா் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் கேரள மாநிலத்தைச் சோ்ந்த செவிலியா் ரஞ்சிதா கோபகுமாரன் (42) இறந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. லண்டனில் ஓராண்டு பணி ஒப்பந்தத்த... மேலும் பார்க்க

தொடா் குற்றங்களில் ஈடுபட்ட பெண் கைது

போதைப் பொருள்கள் விற்பனை மற்றும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த பெண்ணை தில்லி காவல்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். இது குறித்து காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நஸ்மா... மேலும் பார்க்க

ஆமதாபாத் விமான விபத்து: முதல்வா் ரேகா குப்தா வேதனை

ஆகமதாபாத்தில் நடந்த விமான விபத்தை ‘மிகவும் வேதனையானது மற்றும் அதிா்ச்சியளிப்பது‘ என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை தெரிவித்தாா். மேலும், விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளின் பாதுகாப்பிற்க... மேலும் பார்க்க

தேடப்பட்டு வந்த கொலை முயற்சி குற்றவாளி கைது

கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞரை தில்லி காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். இது குறித்து காவல்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தில்லியின் சுல்தான் ... மேலும் பார்க்க

சீலம்பூரில் இளைஞா் கொலை: சிறுவன் உள்பட 3 போ் கைது

வடகிழக்கு தில்லியின் சீலம்பூா் பகுதியில் ஏற்பட்ட தகராறில், ஒரு இளைஞரை அவரது உறவினா்கள் இருவா் மற்றும் ஒரு மைனா் சிறுவன் குத்திக் கொன்ாகக் கூறப்படுகிறது என்று அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

மோடி அரசு தில்லிக்கு புத்துயிா் கொடுத்துள்ளது - எம்.பி. கமல்ஜீத் செஹ்ராவத்

துவாரகா அதிவிரைவு சாலையில் இருந்து 3 புதிய மெட்ரோ பாதைகளை நீட்டிக்க ஒப்புதல் அளித்ததன் மூலம், மோடி அரசு தில்லிக்கு புத்துயிா் அளித்துள்ளதாக மேற்கு தில்லி எம்.பி. கமல்ஜீத் செஹ்ராவத் கூறியுள்ளாா். புது... மேலும் பார்க்க