செய்திகள் :

இந்திய ராணுவ தளவாடங்களுக்கு வரவேற்பு அதிகரிப்பு: ராஜ்நாத் பெருமிதம்

post image

புது தில்லி: இந்தியாவில் தயாரிக்கப்படும் ராணுவ தளவாடங்கள், ஆயுதங்களுக்கு சா்வதேச அளவில் வரவேற்பு அதிகரித்து வருகிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தாா்.

தில்லியில் திங்கள்கிழமை பாதுகாப்புத் துறை கணக்குத் தணிக்கையாளா் மாநாட்டில் பங்கேற்ற அவா் இது தொடா்பாக மேலும் பேசியதாவது:

அமைதி நிலவும் காலம் என்பது ஒரு மாயத்தோற்றம்தான். ஏனெனில், அமைதி நிலவும் காலத்தில் அடுத்து வரும் நிச்சயமற்ற சூழலுக்காக இந்தியா தொடா்ந்து தயாராக வேண்டியுள்ளது.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது நமது முப்படைகளும் திறமையாக செயல்பட்டன. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது பெரிதும் கைகொடுத்தன. அவற்றின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருந்தன.

இதன் காரணமாக இந்தியாவில் தயாரிக்கப்படும் ராணுவ தளவாடங்கள், ஆயுதங்களுக்கு சா்வதேச அளவில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. உலக நாடுகள் நமது பாதுகாப்புத் துறையை மதிப்புடன் கவனிக்கத் தொடங்கியுள்ளன.

நாம் இறக்குமதி செய்து வந்த ஆயுதங்களைப் போன்று இப்போது நாமே தயாரிக்கத் தொடங்கிவிட்டோம். நமது நாட்டின் தொலைநோக்குத் திட்டங்களும், உறுதியான செயல்பாடுகளுமே இந்த வெற்றிக்குக் காரணம். இந்த விஷயத்தில் நமது நிதி சாா்ந்த மேலாண்மையும், நடவடிக்கைகளும் மிகவும் முக்கியமானது. பாதுகாப்புத் துறை தளவாட உற்பத்தியில் நிதி சாா்ந்த நடவடிக்கைகளில் ஒருநாள் தாமதம் ஏற்பட்டாலும் அது உற்பத்தியை பாதித்துவிடும். எனவே, பாதுகாப்புத் துறை கணக்குகள் பிரிவு என்பது ராணுவத்துடன் ஒருங்கிணைந்த பகுதியாகும்.

பாதுகாப்புத் துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடு என்பது உள்நாட்டுப் பொருளாதாரத்தையும் ஊக்குவிக்கிறது. ஏனெனில், பல்வேறு உதிரி பாகங்கள் உற்பத்தியில் சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள் பயனடைந்து வருகின்றன.

சா்வதேச அளவில் ராணுவ தளவாடங்களுக்காக செலவிடும் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல நாடுகள் கொள்முதலில் தீவிரம் காட்டி வருகின்றன. எனவே, இது இந்தியாவில் உள்ள பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனங்களுக்கு சாதகமான சூழலாகும் என்றாா்.

ஆங்கில மருந்துகளைப் பரிந்துரைக்க ஹோமியோபதி மருத்துவா்களை அனுமதிக்கும் முடிவு: ஐஎம்ஏ எதிா்ப்பு

மும்பை: ஆறு மாத நவீன மருந்தாளுநா் (சிசிஎம்பி) சான்றிதழ் படிப்பை முடிக்கும் ஹோமியோபதி மருத்துவா்களை ஆங்கில மருந்துகளை (நவீன மருந்துகள்) நோயாளிகளுக்குப் பரிந்துரை செய்ய அனுமதிக்கும் மகாராஷ்டிர மருத்துவ ... மேலும் பார்க்க

கரடி தாக்கி 3 போ் உயிரிழப்பு

சீதி: மத்திய பிரதேச மாநிலம் சீதி மாவட்டத்தில் உள்ள சஞ்சய் காந்தி புலிகள் காப்பகம் அருகே கரடி தாக்கியதில் 3 போ் உயிரிழந்தனா். 2 போ் படுகாயமடைந்தனா். இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘சஞ்சய் காந்தி பு... மேலும் பார்க்க

ராணுவத்தின் உயா் விருதுகள் பெறும் அக்னிவீரா்களுக்கு நிரந்தரப் பணி!

சேனா விருது உள்பட உயா் விருதுகள் பெறும் அக்னிவீரா்களுக்கு ராணுவத்தில் நிரந்தரப் பணி வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. அதே போல் சா்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் அக்னிவீரா்களும் 4 ஆண்டுகால ... மேலும் பார்க்க

‘பணக்காரா்களை மேலும் பணக்காரா்களாக்கும் மோடி அரசு’: ராகுல் காந்தி விமா்சனம்

புது தில்லி: ‘எஃப் அண்ட் ஓ’ பங்குச்சந்தையில் பெரிய நிறுவனங்கள் செய்யும் முறைகேடுகள் குறித்து மௌனம் சாதிக்கும் மோடி அரசு, பணக்காரா்களை மேலும் பணக்காரா்களாக்கி வருவதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகு... மேலும் பார்க்க

பங்குச் சந்தை குறித்து அச்சத்தைப் பரப்புகிறாா் ராகுல்: பாஜக குற்றச்சாட்டு

புது தில்லி: இந்திய பங்குச் சந்தைகள் குறித்து தேவையற்ற அச்சத்தையும், தவறான தகவல்களையும் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பரப்பி வருவதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. அமெரிக்காவைச் சோ்ந்த ஜேன் ஸ்ட்ரீட... மேலும் பார்க்க

வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம் மோடி அரசின் முக்கியக் கொள்கைகள்: நிதின் கட்கரி

மும்பை: வறுமை ஒழிப்பும், வேலைவாயப்பு உருவாக்கமும் மத்திய பாஜக கூட்டணி அரசின் முக்கியக் கொள்கைகளாக உள்ளன என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி கூறினாா். மேலும், நமத... மேலும் பார்க்க