செய்திகள் :

வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம் மோடி அரசின் முக்கியக் கொள்கைகள்: நிதின் கட்கரி

post image

மும்பை: வறுமை ஒழிப்பும், வேலைவாயப்பு உருவாக்கமும் மத்திய பாஜக கூட்டணி அரசின் முக்கியக் கொள்கைகளாக உள்ளன என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி கூறினாா்.

மேலும், நமது நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நமது நிதியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்; அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து நிதியுதவி பெறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாா்.

மும்பையில் திங்கள்கிழமை நடைபெற்ற கணக்குத் தணிக்கை (சி.ஏ.) படிப்பு மாணவா்களின தேசிய மாநாட்டில் பங்கேற்ற கட்கரி மேலும் பேசியதாவது:

முன்னாள் பிரதமா் நரசிம்ம ராவ், அவரது ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங் ஆகியோா் நாட்டில் பொருளாதார தாராளமயமாக்கல் நடவடிக்கையை அறிமுகப்படுத்தினா். ஆனால், இது ஒரு சிலரை மட்டும் மையப்படுத்தப்பட்ட பொருளாதாரமாக இருந்துவிடக் கூடாது என்பதில் நாம் மிகுந்த கவனத்துடன் உள்ளோம்.

நாட்டின் ஏழைகள் எண்ணிக்கை மெதுவாக அதிகரிப்பது, நாட்டின் செல்வம் குறிப்பிட்ட ஒரு சிலரிடம் மட்டும் குவியும் அபாயம் குறித்து மத்திய அரசு மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. நாட்டின் பொருளாதார சூழல் கடந்த 10 ஆண்டுகளில் வெகுவாக மாறிவிட்டது. இந்த நேரத்தில் கணக்குத் தணிக்கையாளா்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.

கணக்குத் தணிக்கையாளா் நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றனா். வெறும் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வும், சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) தாக்கல் செய்வதும் மட்டும் கணக்குத் தணிக்கை அதிகாரிகளின் பணியல்ல. நாட்டின் பொருளாதார வளா்ச்சியிலும் முக்கியப் பங்காற்றி வருகின்றனா்.

நமது நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நமது நிதியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து நிதியுதவி பெறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாா்.

அண்ணா பல்கலை.யின் முன்னாள் மாணவர்கள் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்! ஹைதராபாத்தில் பரபரப்பு!

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பட்டுள்ளதால், அங்கு காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஹைதராபாத்தின் ஓல்ட் சிட்டி பகுதி... மேலும் பார்க்க

பேரணியில் பாலஸ்தீன கொடி அச்சிட்ட சட்டை..! 4 இளைஞர்கள் கைது!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாலஸ்தீன கொடி அச்சிடப்பட்ட சட்டையை அணிந்து பேரணியில் பங்கேற்ற 4 இளைஞர்கள், அம்மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தியோரியா மாவட்டத்தில் கடந்த ஜூலை 6 ஆம் தேதி மு... மேலும் பார்க்க

கடலூர் ரயில் விபத்து: ரயில்வே அமைச்சருக்கு தெரியாதா?

கடலூர் அருகே தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதி பள்ளி மாணவர்கள் பலியான விவகாரத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதுவரை இரங்கல் தெரிவிக்கவில்லை.கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே திறந்திர... மேலும் பார்க்க

புறப்பட்ட சில நிமிடங்களில் தரையிறங்கிய இண்டிகோ விமானம்! 51 பயணிகள் உயிர்தப்பினர்

இந்தூரில் இருந்து ராய்ப்பூருக்கு இன்று காலை புறப்பட்ட இண்டிகோ விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையிறங்கியது. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் தேவி அஹில்யாபாய் ஹோல்கர... மேலும் பார்க்க

வாக்காளர் பட்டியல் திருத்தம் பிகார் அரசியலமைப்புக்கு எதிரானது: பரூக் அப்துல்லா

பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள பிகாரில் வாக்காளர் பட்டியல்களில் சிறப்புத் திருத்தத்தை மேற்கொள்ளத் தேர்தல் ஆணையத்தின் முடிவு அரசியலமைப்புக்கு எதிரானது என்று தேசிய மாநாட்டுத் தலைவர் பரூக் அப்துல்லா கூறினார... மேலும் பார்க்க

பிகார் பெண்களுக்கு அரசுப் பணியில் 35% ஒதுக்கீடு! 43 திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

பிகார் பெண்களுக்கு அரசுப் பணிகளில் 35 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.முன்னதாக, பிற மாநில பெண்களும் 35 சதவிகித ஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்களாக இருந்த நிலையில், தற்போது ... மேலும் பார்க்க