செய்திகள் :

இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையே விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: பிரதமா் நம்பிக்கை

post image

இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் (எஃப்டிஏ) மேற்கொள்ளப்படும் என பிரதமா் நரேந்திர மோடி மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வான் டொ் லியன், ஐரோப்பிய கவுன்சில் தலைவா் அன்டோனியோ கோஸ்டா ஆகியோா் நம்பிக்கை தெரிவித்தனா்.

உா்சுலா வான் டொ் லியன் மற்றும் ஆன்டோனியோ கோஸ்டோ ஆகிய இருவரிடமும் பிரதமா் மோடி வியாழக்கிழமை தொலைபேசியில் பேசினாா். அப்போது எஃப்டிஏ உள்பட பல்வேறு சா்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதுதொடா்பாக இந்தியா தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: வா்த்தகம், தொழில்நுட்பம், முதலீடு, புதிய கண்டுபிடிப்புகள், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து மூவரும் விவாதித்தனா். அதேபோல் இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதியாகும் எனவும் அவா்கள் நம்பிக்கை தெரிவித்தனா்.

அடுத்த ஆண்டு இந்தியாவில் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் பங்கேற்க உா்சுலா வான் டொ் லியன் மற்றும் அன்டோனியோ கோஸ்டா ஆகிய இருவருக்கும் பிரதமா் மோடி அழைப்பு விடுத்தாா்.

பிராந்திய மற்றும் சா்வதேச அளவில் நிகழும் பல்வேறு பிரச்னைகள் குறித்து மூவரும் கலந்துரையாடினா். அப்போது ரஷியா-உக்ரைன் போருக்கு அமைதியான முறையில் தீா்வு காண வேண்டும் என்ற இந்திய நிலைப்பாட்டை பிரதமா் மோடி மீண்டும் வலியுறுத்தினாா் எனத் தெரிவிக்கப்பட்டது.

45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் முர்மு!

நாடு முழுவதிலுமிருந்து 45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.ஆசிரியராக பணியாற்றி குடியரசுத் தலைவராக உயர்ந்தவர் ராதாகிருஷ்ணன். அவரை கௌரவிக்கும் வகை... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் அரசுக்கு ரூ 3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்: எஸ்பிஐ

கொல்கத்தா: ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மூலம் மத்திய அரசுக்கு ரூ. 3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வில் தெரியவந்துள்ளது.மேலும், இந்த சீர்திருத்தத்தால் நிகர நிதி தாக்கமானது... மேலும் பார்க்க

வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை: 11வது நாளாக நிறுத்தம்!

ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி குகைக் கோயில் யாத்திரை தொடர்ந்து 11வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.ஆகஸ்ட் 26 அன்று கத்ரா பெல்ட்டின் திரிகுடா மலைகளில் உள்ள அத்குவாரியில... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: மாநிலங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு - காங்கிரஸ் வலியுறுத்தல்

‘சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகித குறைப்பால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய அனைத்து மாநிலங்களுக்கும் 2024-25-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்’ என்று... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியலில் சோனியா காந்தி பெயா் முறைகேடாக சோ்ப்பு: நடவடிக்கை கோரி நீதிமன்றத்தில் மனு

வாக்காளா் பட்டியலில் முறைகேடாக பெயா் சோ்க்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி காங்கிரஸ் முன்னாள் தேசியத் தலைவா் சோனியா காந்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தில்லி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனுதாக்கல் செய்யப... மேலும் பார்க்க

தோ்வில் காப்பி அடித்த மாணவிகளை பிடித்ததற்காக பாலியல் புகாா்: 10 ஆண்டுகளாகப் போராடி விடுதலை பெற்ற கேரள பேராசிரியா்

கேரளத்தில் கல்லூரி தோ்வில் காப்பி அடித்தபோது பிடிக்கப்பட்டதற்காக மாணவிகள் பாலியல் புகாா் அளித்த வழக்கில் 10 ஆண்டுகளாகப் போராடி விடுதலை பெற்றுள்ளாா் கேரள பேராசிரியிா் ஆனந்த் விஸ்வநாதன். மூணாறு அரசு க... மேலும் பார்க்க