செய்திகள் :

இந்தியா மீது 50% வரி! அமெரிக்காவுக்குத்தான் பெரும் பாதிப்பு!

post image

இந்தியா மீது அமெரிக்கா விதித்த 50 சதவிகித வரியால், அமெரிக்காவுக்கே பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இந்தியா மீதான வரிவிதிப்பால், இந்தியாவில் செயல்படும் அமெரிக்காவின் பெப்சி, கோகோ கோலா, கேஎஃப்சி, மெக்டொனால்டு, சப்வே போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் புறக்கணிக்கப்படும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன.

145 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட இந்தியாவில் அமெரிக்க நிறுவனங்கள் புறக்கணிக்கப்படுவது, அந்நாட்டில் பெரும் இழப்புகளையும் கடும் சவால்களையும் ஏற்படுத்தும்.

மேற்கு மற்றும் தென்னிந்தியாவில் மெக்டொனால்ட்ஸை இயக்கும் வெஸ்ட்லைஃப் ஃபுட் வேர்ல்ட் லிமிடெட், 2024 ஆம் நிதியாண்டில் ரூ. 2,390 கோடி வருவாயைப் பதிவு செய்துள்ளது, இது முந்தைய ஆண்டைவிட 5 சதவிகிதம் அதிகமாகும்.

இதனிடையே, இந்தியாவில் பெப்சிகோவின் வருவாய் 2024 ஆம் நிதியாண்டில் ரூ. 8,200 கோடியாக உள்ளது. பெப்சிகோவின் உலகளாவிய முதல் 15 சந்தைகளில் இந்திய சந்தையில் மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் பெப்சிகோ நிறுவனம், சுமார் ரூ. 3,500 முதல் 4,000 கோடி முதலீடு செய்துள்ளது.

பிரான்ஸ், பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளில் அமெரிக்க நிறுவனங்கள் புறக்கணிக்கப்பட்டு வரும்நிலையில், இந்தியாவிலும் அவற்றை புறக்கணித்தல் என்பது அமெரிக்காவுக்குத்தான் பேரிழப்பாக அமையும்.

இந்தியா மீது பரஸ்பர வரியாக 50 சதவிகிதம் விதித்த அமெரிக்கா, ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை எதிர்த்து மேலும் 50 சதவிகித வரியையும் அறிவித்தது.

இந்த வரிவிதிப்பையடுத்து, சுதேசி கொள்கை மீது மத்திய அரசு கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.

இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில்,

இந்தியாவை உலகின் 3 ஆவது பெரிய பொருளாதார நாடாக மாற்ற விரும்பும் எந்தவொரு நபரோ அரசியல் கட்சியோ நாட்டின் நலனுக்காகத்தான் பேச வேண்டும். சுதேசி கொள்கையை மக்கள் மனங்களில் ஏற்படுத்த வேண்டும்.

இந்தியன் வியர்வை சிந்தி தயாரித்த பொருள்களை நாம் வாங்கப் போகிறோம். இந்திய மக்களின் திறமையால், வியர்வையால் எதைச் செய்தாலும், அதுதான் சுதேசி என்று தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில், உலகில் பொருளாதார சுயநல அரசியல் உள்ளது. ஒவ்வொருவரும் தங்களின் சொந்த நலன்களைப் பாதுகாப்பதில்தான் மும்முரமாக உள்ளனர் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை மறைமுகமாக விமர்சித்தார்.

இதையும் படிக்க:தெருநாய்களுக்கு நன்றியுள்ளவராக இருப்பேன்: நீதிபதி நகைச்சுவை

'No Pepsi, Coca-Cola, McDonald's': After Trump's 50% tariffs

ஜம்முவில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட மத்திய அமைச்சர் அமித் ஷா

ஜம்முவின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை பார்வையிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அப்போது பிக்ரம் சவுக் அருகே உள்ள தாவி பாலத்தில் நின்று ஆற்றங்கரையோரங்க... மேலும் பார்க்க

மூளையைத் தின்னும் அமீபா: கேரளத்தில் மேலும் இருவர் பலி!

கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்த தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா(... மேலும் பார்க்க

தோளோடு தோள் நிற்கும் இந்தியா - ரஷியா! புதினுடனான சந்திப்பில் மோடி பேச்சு!

மிகவும் கடினமான சூழலிலும் இந்தியாவும் ரஷியாவும் தோளோடு தோள் நின்று உதவியுள்ளதாக ரஷிய அதிபருடனான இருதரப்பு சந்திப்பில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.சீனாவின் துறைமுக நகரான தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு... மேலும் பார்க்க

அடுத்த 24 - 48 மணி நேரங்கள் அபாயகரமானவை: வானிலை ஆய்வு மையம்

ஏற்கனவே மழை, வெள்ளத்தால் திணறி வரும் வட இந்திய மாநிலங்களுக்கு அடுத்த 24 - 48 மணி நேரங்கள் அபாயகரமானவை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் பார்க்க

ராகுல் காந்தியின் மனு: செப்.3ல் அலாகாபாத் உயர்நீதிமன்றம் விசாரணை!

வாரணாசி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகிய காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தாக்கல் செய்த மனு மீதான அடுத்த விசாரணை செப்டம்பர் 3-ஆம் தேதி அலாகாபாத் உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை நிர்ணயித்தது. ... மேலும் பார்க்க

கேதார்நாத் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு: இருவர் பலி!

கேதார்நாத் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சோன்பிரயாக் மற்றும் கௌரிகுண்ட் இடையே முன்கட்டியா அருகே இன்று காலை கால... மேலும் பார்க்க