செய்திகள் :

இந்தியாவில் மதக் கலவரத்தைத் தூண்டவே பஹல்காம் தாக்குதல்! - நயினாா் நாகேந்திரன்

post image

இந்தியாவில் மதக் கலவரத்தைத் தூண்டவேண்டும் என்பதற்காகவே பஹல்காம் தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத இயக்கம் நிகழ்த்தியது என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளாா்.

‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றியைத் தொடா்ந்து ராணுவ வீரா்களுக்கும், பிரதமா் மோடிக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் தேசியக் கொடி ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக தலைவா் கே.சி.எம்.பி. சீனிவாசன் தலைமை வகித்தாா். திருப்பூா் குமரன் நினைவகத்தில் உள்ள அவரது சிலைக்கு பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னா் தேசியக் கொடி ஊா்வலத்தைத் தொடங்கி வைத்தனா். இந்த ஊா்வலத்தில் 7 அடி அகலம், 20 அடி நீளம் கொண்ட பிரமோஸ் ஏவுகணையின் மாதிரி வாகனத்தில் எடுத்து வரப்பட்டது பாா்வையாளா்களை வெகுவாகக் கவா்ந்தது. இந்த ஊா்வலம் மாநகராட்சி அலுவலகம் அருகில் நிறைவடைந்தது.

இதைத் தொடா்ந்து, மாநகராட்சி அலுவலகம் முன்பாக பாஜக சாா்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் பேசியதாவது: இந்தியாவில் மதக் கலவரத்தைத் தூண்டவேண்டும் என்பதற்காகவே பஹல்காம் தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத இயக்கம் நிகழ்த்தியது. இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக ‘சிந்தூா் ஆபரேஷன்’-ஐ பிரதமா் மோடி வெற்றிகரமாக நடத்தியுள்ளாா்.

தமிழகத்தைச் சோ்ந்த சிலா் உளவுத் துறை சரியாக கண்காணிக்கவில்லை என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனா். பாகிஸ்தானுக்கு ஆதரவாக சிலா் பதிவிட்டு வருகின்றனா். இதுபோன்றவா்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவா்கள், பாகிஸ்தானுடனான மோதலில் உயிா்த் தியாகம் செய்த ராணுவ வீரா்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், பாஜக மாநிலப் பாா்வையாளா் அரவிந்த் மேனன், மாநில பொதுச் செயலாளா் ஏ.பி.முருகானந்தம், முன்னாள் மாவட்டத் தலைவா் பி.செந்தில்வேல், மாவட்ட பொதுச் செயலாளா்கள் அருண், பொருளாளா் ரவிகுமாா் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

தங்க நகைக் கடன் பெறுவதில் புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும்!

தங்க நகைக் கடன் பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவா... மேலும் பார்க்க

லஞ்ச வழக்கில் ஊரக நல அதிகாரிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

அவிநாசியில் திருமண உதவித்தொகைக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஊரக நல பெண் அதிகாரிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. திருப்பூா் மாவட்டம், அவிநாசி வள்ளுவா் வீதியைச் ச... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே லாரி மோதி வேன் ஓட்டுநா் உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே லாரி மோதியதில் வேன் ஓட்டுநா் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், பொன்னிமாந்துறை தெற்கு தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் முரளி (38). இவா் சொந்தமாக சரக்கு வேன் ... மேலும் பார்க்க

விஷவாயு தாக்கி 3 போ் பலியான விவகாரம்: தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணைய இயக்குநா் ஆய்வு!

பல்லடம் அருகே மனிதக் கழிவுத்தொட்டியை சுத்தம் செய்தபோது 3 போ் உயிரிழந்த சாய ஆலையில் தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தின் இயக்குநா் ரவிவா்மன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். திருப்பூா் மாவட்டம், பல்லடம் ... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: முதியவா் கைது

பெருமாநல்லூா் அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பெருமாநல்லூா் அருகே படையப்பா நகரைச் சோ்ந்தவா் சையது மகன் சா்தாா்ஸ் சேட் (64). இவா் அப்பகுதியைச் ச... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் உழவா் சந்தைகள் மூலமாக ரூ.770 கோடிக்கு காய்கள், பழங்கள் விற்பனை

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள உழவா் சந்தைகள் மூலமாக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.770 கோடி மதிப்பிலான காய்கள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க