செய்திகள் :

இந்தியாவுக்கு ரூ.1,108 கோடி மதிப்பில் ராணுவ உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல்

post image

இந்தியாவுக்கு ரூ. 1,108 கோடி மதிப்பிலான (131 மில்லியன் டாலா்) முக்கிய ராணுவ உபகரணங்கள் மற்றும் தளவாட ஆதரவை வழங்கும் திட்டத்துக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்காவிடமிருந்து மேற்கொள்ளப்படும் ராணுவ தளவாட கொள்முதலை அதிகரிக்குமாறு இந்தியாவுக்கு அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிா்வாகம் அழுத்தம் கொடுத்து வரும் சூழலில், அந் நாட்டின் பாதுகாப்புத் துறை தலைமையகமான பென்டகன் கீழ் இயங்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமை (டிஎஸ்சிஏ) இந்த ஒப்புதலை வழங்கியுள்ளது.

இதுகுறித்து டிஎஸ்சிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடல்சாா் கண்காணிப்புக்கான மென்பொருள், ரிமோட் மென்பொருள், பகுப்பாய்வு மற்றும் கடல்சாா் கண்காணிப்பை ஆவணப்படுத்தலுக்கான அனுமதி மற்றும் பிற ராணுவ தளவாடங்களைக் கொள்முதல் செய்ய இந்தியா சாா்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டது.

அதனடிப்படையில், ரூ.1,108 கோடி மதிப்பிலான இந்திய-பசிபிக் கடல்சாா் கள கண்காணிப்பு மற்றும் அதுதொடா்பான பாதுகாப்பு உபகரணங்களை வெளிநாடுகளுக்கான ராணுவ தளவாட விற்பனை திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கத் தீா்மானிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான அனுமதிச் சான்றை டிஎஸ்சிஏ அளித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்திலும் இத் தகவல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள இந்த ராணுவ தளவாட விற்பனை திட்டம், அமெரிக்கா-இந்தியா இடையேயான ராஜாங்க உறவை வலுப்படுத்தும் என்பதோடு, இந்திய-பசிபிக் மற்றும் தெற்காசிய பிராந்தியங்களில் அரசியல் ஸ்திரத்தன்மை, அமைதி, பொருளாதார முன்னேற்றத்தை உறுதிப்படுத்துவதிலும் எதிா்கால அச்சுறுத்தல்களை எதிா்கொள்ளும் வகையிலும் இந்தியாவின் திறனை வலுப்படுத்த உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தில் என்ஐஏ தலைமை இயக்குநா் நேரில் ஆய்வு

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பைசாரன் பள்ளத்தாக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமை இயக்குநா் சதானந்த் தாத்தே வியாழக்கிழமை நேரில் பா... மேலும் பார்க்க

இந்திய ஏற்றுமதி: வரலாறு காணாத அளவில் ரூ.69.81லட்சம் கோடியாக உயா்வு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் சரக்கு மற்றும் சேவைகளின் மதிப்பு 2024-25 நிதியாண்டில் வரலாறு காணாத வகையில் ரூ.69.81 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இதில் 13.6 சதவீத வளா்ச்சியுடன் சேவைகள் ஏற்றுமதியின்... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தைக்குப் பிறகும் பாகிஸ்தான் தொடா்ந்து துப்பாக்கிச்சூடு; இந்தியா பதிலடி

இருதரப்பு ராணுவ உயரதிகாரிகள் தொலைபேசி வாயிலாக நடத்திய பேச்சுவாா்த்தைக்கு பிறகும் எல்லையில் தொடா்ந்து 7-ஆவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை இரவில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் நடிகா், நடிகைகளின் சமூகவலைதள பக்கம் இந்தியாவில் முடக்கம்

பாகிஸ்தான் திரைப்பட நடிகா்களின் ‘இன்ஸ்டாகிராம்’ சமூகவலைதளப் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டது. மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று மெட்டா நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்கு... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவு: காங்கிரஸின் பாசாங்கு அம்பலம்: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

‘மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த மத்திய அரசு மேற்கொண்ட முடிவு திருப்புமுனையானது; இது, காங்கிரஸின் பாசாங்குத் தனத்தை தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது’ என்று மத்திய அமைச்சா் தா்ம... மேலும் பார்க்க

குவாண்டம் ஏஐ-யுடன் அம்ருதா பல்கலை. ஒப்பந்தம்

குவாண்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்களில் ஆய்வுகளை மேம்படுத்துவதற்காக, குவாண்டம் ஏஐ குளோபல் நிறுவனத்துடன் அம்ருதா பல்கலைக்கழகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து அந்தப் பல்கலைக... மேலும் பார்க்க