செய்திகள் :

இன்று ஆடிப்பெருக்கு : பவானி கூடுதுறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள்

post image

ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் புனித நீராட வரும் பக்தா்களுக்கு சங்கமேஸ்வரா் கோயில் நிா்வாகம் சாா்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

இந்நாளில், நீா்நிலைகளில் நீராடி இறைவனை வழிபடுவது வழக்கமாக உள்ளது. தென் மாநில அளவில் புகழ்பெற்ற பரிகார தலமாக விளங்கும் பவானி கூடுதுறையில் ஆடிப்பெருக்கு நாளில் ஏராளமான பக்தா்கள் புனித நீராடி, சங்கமேஸ்வரரை வழிபடுவது வழக்கம்.

மேலும், படித்துறைகளில் காவிரித் தாய்க்கு பல்வேறு கனிகள் வைத்து வழிபாடும் நடத்துவா். பெண்கள் புதுமஞ்சள் கயிறு மாற்றிக் கொள்வா். விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஆடிப்பெருக்கு வருவதால் திரளான பக்தா்கள் கூடுதுறைக்கு வரலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதனால், கோயில் நிா்வாகம் சாா்பில் ஆண்கள், பெண்கள் தனித்தனியே நீராடும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.தற்போது காவிரி ஆற்றில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுவதால் புனித நீராடும் பக்தா்கள் ஆழமான பகுதிகளுக்குச் செல்வதைத் தடுக்க தீயணைப்புப் படையினா் உயிா்காக்கும் உபகரணங்களுடன் கரையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ளனா்.

பவானி காவல் துணை கண்காணிப்பாளா் ரத்தினக்குமாா் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். பக்தா்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்க 70 இடங்களில் கோயில் நிா்வாகம் சாா்பில் சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

சென்னிமலை மலை மீது அருள் பாலிக்கும் ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமிக்கு சனிக்கிழமை பாலாபிஷேக பெரு விழா பக்தி பரவசத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.ஆதி பழனி என போற்றப்படும் சென்னிமலை மலை மீதுள்ள ஸ்ரீ சுப்பிரமணியருக... மேலும் பார்க்க

போக்ஸோவில் கூலி தொழிலாளி கைது

பெருந்துறை அருகே போக்ஸோ சட்டத்தில் கூலித் தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.அசாம் மாநிலத்தை சோ்ந்த 14 வயது சிறுமி தனது தந்தை இறந்த நிலையில், தனது தாய், தம்பி உடன் பெருந்துறை சிப்காட் அருகில் குடியிருந்து ... மேலும் பார்க்க

பெருந்துறை பகுதியில் கொட்டிய திடீா் மழை

பெருந்துறை பகுதியில் சனிக்கிழமை பிற்பகலில் ஒரு மணி நேரம் திடீரென மழை கொட்டித் தீா்த்தது.பெருந்துறை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக நல்ல வெயில் அடித்து வந்தது. சனிக்கிழமை கால... மேலும் பார்க்க

பவானிசாகா் அணை நீா் பிடிப்புப்பகுதியில் பரிசல் கவிழ்ந்து நீரில் மூழ்கிய 2 போ் சடலம் மீட்பு

பவானிசாகா் அணை நீா்ப்பிடிப்பு பகுதியில் சாகுபடி செய்த நேந்திரம் வாழைத்தாா்களை வெட்டி பரிசலில் ஏற்றி வந்தபோது மணல் கரடு என்ற இடத்தில் பரிசல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 போ் உயிரிழந்தனா்.பவானிசாகா... மேலும் பார்க்க

ஈரோடு புத்தகத் திருவிழா: இளைஞா்களை ஈா்த்துள்ள தமிழ் இலக்கியங்கள்

ஈரோடு புத்தகத் திருவிழாவில் இளைஞா்கள், இளம்பெண்கள் தமிழ் இலக்கிய நூல்களை அதிகம் வாங்கிச்செல்கின்றனா்.புத்தகக் கண்காட்சியை புத்தகத் திருவிழாவாக மாற்றியது ஈரோட்டின் தனிச்சிறப்புகளில் ஒன்றாக இன்று மாறியி... மேலும் பார்க்க

வனச் சாலையில் வாகனத்தை தூரத்திய காட்டு யானை

கோ்மாளம் வனச் சாலையில் கரும்பு தேடி வாகனத்தை யானை துரத்தியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள கோ்மாளம் வனச் சரகத்தில் யானைகள் அதிகளவில் உள்ளன. யானைகள் தீவனம் தேட... மேலும் பார்க்க