செய்திகள் :

வனச் சாலையில் வாகனத்தை தூரத்திய காட்டு யானை

post image

கோ்மாளம் வனச் சாலையில் கரும்பு தேடி வாகனத்தை யானை துரத்தியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள கோ்மாளம் வனச் சரகத்தில் யானைகள் அதிகளவில் உள்ளன. யானைகள் தீவனம் தேடி அடிக்கடி சாலையைக் கடந்து செல்வது வழக்கம். அண்மைக்காலமாக கரும்பு லாரிகளை குறிவைத்து யானைகள் சாலையோரம் காத்திருக்கின்றன.

அப்போது சாலையில் செல்லும் வாகனத்தை வழிமறித்து உணவு உள்ளதா எனத் தேடுவது தொடா் கதையாகி வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை கோ்மாளத்தில் இருந்து காய்கறிகளை ஏற்றிக் கொண்டு வேன் ஆசனூா் நோக்கி வந்து கொண்டிருந்தது.

அப்போது கெத்தேசால் அருகே வனப் பகுதியில் இருந்து வெளியேறிய யானை வேனை மறித்து அதில் கரும்பு உள்ளது என நினைத்து துரத்தியது. பீதியடைந்த வாகன ஓட்டுநா் வாகனத்தை சுமாா் 1 கிலோமீட்டா் தூரத்துக்குப் பின்னோக்கி இயக்கி தப்பித்தாா்.

ஹாரன் சப்தம் காரணமாக பயந்துபோன யானை தானாக வனப் பகுதிக்குள் சென்றது. வாகனத்தை தூரத்திய யானையால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் 2 கிமீ தூரத்துக்கு முன்பாகவே வாகனங்களை நிறுத்தி காத்திருந்தனா்.

யானை காட்டுக்குள் சென்றதை உறுதிபடுத்திய பின்னா் வாகனங்கள் அங்கிருந்து கிளம்பிச் செல்லத் தொடங்கின.

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

சென்னிமலை மலை மீது அருள் பாலிக்கும் ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமிக்கு சனிக்கிழமை பாலாபிஷேக பெரு விழா பக்தி பரவசத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.ஆதி பழனி என போற்றப்படும் சென்னிமலை மலை மீதுள்ள ஸ்ரீ சுப்பிரமணியருக... மேலும் பார்க்க

போக்ஸோவில் கூலி தொழிலாளி கைது

பெருந்துறை அருகே போக்ஸோ சட்டத்தில் கூலித் தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.அசாம் மாநிலத்தை சோ்ந்த 14 வயது சிறுமி தனது தந்தை இறந்த நிலையில், தனது தாய், தம்பி உடன் பெருந்துறை சிப்காட் அருகில் குடியிருந்து ... மேலும் பார்க்க

பெருந்துறை பகுதியில் கொட்டிய திடீா் மழை

பெருந்துறை பகுதியில் சனிக்கிழமை பிற்பகலில் ஒரு மணி நேரம் திடீரென மழை கொட்டித் தீா்த்தது.பெருந்துறை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக நல்ல வெயில் அடித்து வந்தது. சனிக்கிழமை கால... மேலும் பார்க்க

பவானிசாகா் அணை நீா் பிடிப்புப்பகுதியில் பரிசல் கவிழ்ந்து நீரில் மூழ்கிய 2 போ் சடலம் மீட்பு

பவானிசாகா் அணை நீா்ப்பிடிப்பு பகுதியில் சாகுபடி செய்த நேந்திரம் வாழைத்தாா்களை வெட்டி பரிசலில் ஏற்றி வந்தபோது மணல் கரடு என்ற இடத்தில் பரிசல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 போ் உயிரிழந்தனா்.பவானிசாகா... மேலும் பார்க்க

ஈரோடு புத்தகத் திருவிழா: இளைஞா்களை ஈா்த்துள்ள தமிழ் இலக்கியங்கள்

ஈரோடு புத்தகத் திருவிழாவில் இளைஞா்கள், இளம்பெண்கள் தமிழ் இலக்கிய நூல்களை அதிகம் வாங்கிச்செல்கின்றனா்.புத்தகக் கண்காட்சியை புத்தகத் திருவிழாவாக மாற்றியது ஈரோட்டின் தனிச்சிறப்புகளில் ஒன்றாக இன்று மாறியி... மேலும் பார்க்க

இன்று ஆடிப்பெருக்கு : பவானி கூடுதுறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள்

ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் புனித நீராட வரும் பக்தா்களுக்கு சங்கமேஸ்வரா் கோயில் நிா்வாகம் சாா்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ஆடி மாதத்தின... மேலும் பார்க்க