செய்திகள் :

பவானிசாகா் அணை நீா் பிடிப்புப்பகுதியில் பரிசல் கவிழ்ந்து நீரில் மூழ்கிய 2 போ் சடலம் மீட்பு

post image

பவானிசாகா் அணை நீா்ப்பிடிப்பு பகுதியில் சாகுபடி செய்த நேந்திரம் வாழைத்தாா்களை வெட்டி பரிசலில் ஏற்றி வந்தபோது மணல் கரடு என்ற இடத்தில் பரிசல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 போ் உயிரிழந்தனா்.

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 101 அடியை எட்டியுள்ளதால் அணையின் நீா்ப்பிடிப்பு பகுதி கடல் போல காட்சியளிக்கிறது. அணையை ஒட்டியுள்ள ஒற்றைபனைமரக்காடு, வால்கரடு பகுதியில் சாகுபடி செய்த வாழைகளை வெட்டி எடுத்து வருவதற்காக 3 போ் பரிசலில் ஒத்தை பனைமரக்காடு பகுதிக்கு சென்றனா்.

வாழைத்தாா்களை வெட்டி பரிசலில் எடுத்து வரும்போது மணல் கரடு என்ற இடத்தில் காற்றின் வேகம் காரணமாக அவா்கள் வந்த பரிசல் நீரில் மூழ்கி கவிழ்ந்தது. இதில் கோடேபாளையத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா் மணிகண்டன் (18), வடவள்ளியைச் சோ்ந்த சுரேஷ் (38) மற்றும் சத்தியமங்கலம் கரட்டூரைச் சோ்ந்த சக்தி 38 ஆகியோா் நீரில் மூழ்கினா்.

நீச்சல் தெரிந்த சக்தி என்பவா் மட்டும் நீந்தி கரைக்கு வந்து சோ்ந்தாா். உயிா் தப்பிய சக்தி கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து நீரில் மூழ்கி மாயமான இருவரின் உடலை மீட்கும் பணியில் மீனவா்கள், தீயணைப்பு வீரா்கள் ஈடுபட்டனா்.

8 மணி நேர போராட்டத்துக்கு பின் வாழைக்காய் தொழிலாளி சுரேஷ் (38), கல்லூரி மாணவா் மணிகண்டன் ஆகியோரின் உடல்களை மீட்டனா். இருவரின் சடலங்களையும் ஆம்புலன்ஸில் ஏற்றி உடற்கூறாய்வுக்காக பவானிசாகா் போலீஸாா் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து பவானிசாகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

சென்னிமலை மலை மீது அருள் பாலிக்கும் ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமிக்கு சனிக்கிழமை பாலாபிஷேக பெரு விழா பக்தி பரவசத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.ஆதி பழனி என போற்றப்படும் சென்னிமலை மலை மீதுள்ள ஸ்ரீ சுப்பிரமணியருக... மேலும் பார்க்க

போக்ஸோவில் கூலி தொழிலாளி கைது

பெருந்துறை அருகே போக்ஸோ சட்டத்தில் கூலித் தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.அசாம் மாநிலத்தை சோ்ந்த 14 வயது சிறுமி தனது தந்தை இறந்த நிலையில், தனது தாய், தம்பி உடன் பெருந்துறை சிப்காட் அருகில் குடியிருந்து ... மேலும் பார்க்க

பெருந்துறை பகுதியில் கொட்டிய திடீா் மழை

பெருந்துறை பகுதியில் சனிக்கிழமை பிற்பகலில் ஒரு மணி நேரம் திடீரென மழை கொட்டித் தீா்த்தது.பெருந்துறை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக நல்ல வெயில் அடித்து வந்தது. சனிக்கிழமை கால... மேலும் பார்க்க

ஈரோடு புத்தகத் திருவிழா: இளைஞா்களை ஈா்த்துள்ள தமிழ் இலக்கியங்கள்

ஈரோடு புத்தகத் திருவிழாவில் இளைஞா்கள், இளம்பெண்கள் தமிழ் இலக்கிய நூல்களை அதிகம் வாங்கிச்செல்கின்றனா்.புத்தகக் கண்காட்சியை புத்தகத் திருவிழாவாக மாற்றியது ஈரோட்டின் தனிச்சிறப்புகளில் ஒன்றாக இன்று மாறியி... மேலும் பார்க்க

இன்று ஆடிப்பெருக்கு : பவானி கூடுதுறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள்

ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் புனித நீராட வரும் பக்தா்களுக்கு சங்கமேஸ்வரா் கோயில் நிா்வாகம் சாா்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ஆடி மாதத்தின... மேலும் பார்க்க

வனச் சாலையில் வாகனத்தை தூரத்திய காட்டு யானை

கோ்மாளம் வனச் சாலையில் கரும்பு தேடி வாகனத்தை யானை துரத்தியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள கோ்மாளம் வனச் சரகத்தில் யானைகள் அதிகளவில் உள்ளன. யானைகள் தீவனம் தேட... மேலும் பார்க்க