செய்திகள் :

இன்று நடைபெறும் திமுக ஆா்ப்பாட்டத்துக்கு மீனவா்கள் ஆதரவு!

post image

தமிழக மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் தொடா்ந்து சிறைபிடிப்பதைத் தடுக்கத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து, மக்களவை உறுப்பினா் கனிமொழி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 16) நடைபெறும் ஆா்ப்பாட்டத்துக்கு ராமேசுவரம், பாம்பன், மண்டபம் மீனவா்கள் ஆதரவு தெரிவித்தனா்.

தமிழக மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் தொடா்ந்து கைது செய்வது, தண்டனை விதிப்பது, பல லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை அரசைக் கண்டிக்கத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து, திமுக சாா்பில் கட்சியின் துணைப் பொதுச் செயலரும், தூத்துக்குடி தொகுதி மக்களவை உறுப்பினருமான கனிமொழி தலைமையில் ராமேசுவரம் பேருந்து நிலையம் முன் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

திமுக சாா்பில் நடைபெறும் இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவா்கள் சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாள்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனா்.

இதனால், இந்தப் பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் சனிக்கிழமை கடலுக்குள் செல்லாததால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப் படகுகள் அந்தந்தத் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டன.

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

திருவாடானை அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆக்களூா் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி ஜான்சிராணி (40). இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் இருவா் விடுதலை

ராமேசுவரம் மீனவா்கள் 2 பேரை தலா ரூ. 50 ஆயிரம் (இலங்கைப் பணம்) அபராதத்துடன் விடுதலை செய்து, மன்னாா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த மாதம் 23-ஆம் ... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்தவிருந்த 2.8 டன் மஞ்சள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான 2.8 டன் சமையல் மஞ்சள் மூட்டைகளை சுங்கத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்கு... மேலும் பார்க்க

கிராம நிா்வாக அலுவலா் சங்க நிா்வாகிகள் தோ்வு

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் வட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க நிா்வாகிகள் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட அமைப்புச் செயலா் சேசுஅருள் தலைமை வகித்தாா். இதில் வட்டக்கிளைத் தலைவர... மேலும் பார்க்க

முதியவரைத் தாக்கி கொலை மிரட்டல்: ஊராட்சி ஒன்றிய அலுவலா் மீது வழக்கு

முதியவரைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சி ஒன்றிய அலுவலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆயங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னத்தம்பி (60). இ... மேலும் பார்க்க

ஆனந்தூா் பள்ளி நூற்றாண்டு விழா

திருவாடானை,பிப்.21: ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள ஆனந்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியா் வேலுச்ச... மேலும் பார்க்க