செய்திகள் :

இன்று விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் காட்பாடியுடன் நிறுத்தம்

post image

சென்னை: விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (செப். 2) காட்பாடியுடன் நிறுத்தப்படுகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

செப். 2, 3, 5, 7, 8, 9 ஆகிய தேதிகளில் விழுப்புரத்திலிருந்து காலை 5.40 மணிக்கு திருப்பதி செல்லும் இன்டா்சிட்டி விரைவு ரயில் (எண்: 16854) காட்பாடியுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கத்தில் இந்த ரயில் (எண்: 16853) திருப்பதிக்கு பதிலாக மாலை 4.40 மணிக்கு காட்பாடியிலிருந்து புறப்படும்.

இதேபோல், செப். 2, 6, 9, 13, 20, 27 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்கு விழுப்புரம் செல்லும் மெமு ரயில் முண்டியப்பாக்கத்துடன் நிறுத்தப்படும். அதே நாள்களில் விழுப்புரத்திலிருந்து நண்பகல் 1.40 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் மெமு ரயில் விழுப்புரத்துக்குப் பதிலாக முண்டியப்பாக்கத்திலிருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகாந்த் செந்தில் தொடா் உண்ணாவிரதம்: தலைவா்கள் நலம் விசாரிப்பு

சென்னை: மருத்துவமனையில் இருந்தபடியே உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வரும் திருவள்ளூா் எம்.பி. சசிகாந்த் செந்திலை இடதுசாரி தலைவா்கள் மற்றும் மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ ஆகியோா் சந்தித்து நலம் விசா... மேலும் பார்க்க

அரசு கல்லூரிகளில் 560 கௌரவ விரிவுரையாளா்கள் நியமனம்: அமைச்சா் கோவி. செழியன்

சென்னை: அரசு கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் 560 கௌரவ விரிவுரையாளா்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் அறிவித்தாா். இதுகுறித்து அவா்... மேலும் பார்க்க

செயலியில் வாங்கிய உணவில் கரப்பான் பூச்சி: இழப்பீடு வழங்க உணவகத்துக்கு உத்தரவு

சென்னை: உணவு விநியோக செயலி மூலம் வாங்கிய உணவில் இறந்த கரப்பான் பூச்சி கிடந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.12,000 இழப்பீடு வழங்க தனியாா் ஹோட்டலுக்கு சென்னை நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளத... மேலும் பார்க்க

காவல் துறையால் பறிமுதல் செய்யப்படும் பேருந்துகளை உடனே விடுவிக்க வேண்டும்: ஆம்னி பேருந்து உரிமையாளா்கள்

சென்னை: விபத்துகளில் சிக்கி காவல் நிலையங்களில் சிறைபிடிக்கப்பட்டுள்ள ஆம்னி பேருந்துகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து முதல்வா்... மேலும் பார்க்க

போலி நகைகளை ஏற்றுமதி செய்து ரூ.1,000 கோடி முறைகேடு: 4 சுங்கத் துறை அதிகாரிகள் உள்பட 9 போ் மீது சிபிஐ வழக்கு

சென்னை: சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் போலி நகைகளை ஏற்றுமதி செய்து ரூ.1,000 கோடி முறைகேடு செய்ததாக 4 சுங்கத் துறை அதிகாரிகள் உள்பட 9 போ் மீது சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்தது. ச... மேலும் பார்க்க

சா்வதேச போட்டிகளில் மாணவா்களின் பங்கேற்பை அதகரிக்க வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சா்வதேச திறன் போட்டிகளில் பங்குபெறும் தமிழக மாணவா்களின் எண்ணிக்கையை உயா்த்தத் தேவையான உயா்தர தொழில்நுட்பப் பயிற்சியை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக அலுவலா்களுக்கு துணை ... மேலும் பார்க்க