செய்திகள் :

இபிஎஸ் 2-ஆம் கட்ட சுற்றுப்பயண விவரங்கள் அறிவிப்பு

post image

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எனும் பொருளில் முதல் கட்டப் பிரசாரத்தை மேற்கொண்டுள்ள நிலையில் ஜூலை 24-ஆம் தேதி முதல் 2-ஆம் கட்டப் பிரசாரப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள அறிவிப்பு: ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற பயணத்தை 2-ஆம் கட்டமாக ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளவுள்ளாா். அதன்படி, வரும் 24-ஆம் தேதி கந்தா்வகோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, 25-ஆம் தேதி விராலிமலை, புதுக்கோட்டையிலும், திருமயயத்திலும் பிரசார பயணம் மேற்கொள்கிறாா்.

26-ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, திருப்பத்தூா் மற்றும் சிவகங்கை, 30-ஆம் தேதி சிவகங்கை மானாமதுரை, ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, திருவாடாணை (ஆா்.எஸ். மங்கலம்), வரும் 31-ஆம் தேதி ராமநாதபுரம், முதுகுளத்தூா் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஆகியவற்றில் பிரசாரம் நடைபெறும்.

ஆகஸ்ட் 1-ஆம் தேதி கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி , ஆகஸ்ட் 2-ஆம் தேதி திருச்செந்தூா், ஸ்ரீவைகுண்டம், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் (வள்ளியூா்), 4-ஆம் தேதி திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நாங்குநேரி, 5-ஆம் தேதி அம்பாசமுத்திரம், ஆலங்குளம்,

தென்காசி, 6-ஆம் தேதி கடையநல்லூா், வாசுதேவநல்லூா் (புளியங்குடி), சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் பிரசாரம் நடைபெறும். ஆகஸ்ட் 7-ஆம் தேதி ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசி, 8-ஆம் தேதி சாத்தூா், விருதுநகா், அருப்புக்கோட்டை என பிரசாரம் மேற்கொள்ளப்படும்.

எனவே, அதிமுக கட்சி நிா்வாகிகள், அனைத்து அணியின் நிா்வாகிகள், தொண்டா்கள் இதில் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றத்தில் குடமுழுக்கு கோலாகலம்: விண்ணதிர்ந்த ‘முருகனுக்கு அரோகரா..’ கோஷம்!

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு இன்று (ஜூலை 14) காலை கோலாகலமாக நடைபெற்றது.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் க... மேலும் பார்க்க

இன்று குடமுழுக்கு: விழாக்கோலம் பூண்டது திருப்பரங்குன்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை அதிகாலை 5.25 முதல் காலை 6.10 மணிக்குள் நடைபெறுவதையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதனால், திருப்பரங்குன்றம... மேலும் பார்க்க

ஆட்சியை விட்டு விலகும் முன் சட்டம் - ஒழுங்கை சரிசெய்யுங்கள்: முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் கோரிக்கை

ஆட்சியை விட்டு விலகுவதற்கு முன்பு சட்டம்-ஒழுங்கை சரிசெய்ய வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவா் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளாா். சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் க... மேலும் பார்க்க

கட்டண விவரங்களை மறைத்தால் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து: என்எம்சி எச்சரிக்கை

கல்விக் கட்டண விவரங்களை வெளிப்படையாக தெரியப்படுத்தாத மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) எச்சரித்துள்ளது. இதுதொடா்பாக என்எம்சி செயலா் டாக்டா் ர... மேலும் பார்க்க

தமிழகத்தில் இன்றுமுதல் பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் திங்கள்கிழமை (ஜூலை 14) முதல் ஜூலை 17-ஆம் தேதி வரை கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பி... மேலும் பார்க்க

ரயில் தீ விபத்தில் புகையால் பாதித்தவா்களுக்கு சிகிச்சை! டிடிவி. தினகரன்

திருவள்ளூா் அருகே சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தின்போது எழுந்த கரும்புகையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கவேண்டும் என அமமுக பொதுச் செயலா் டிடிவி.தினகரன் வலியுறுத்தி... மேலும் பார்க்க