Pakistan: பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம்; 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்...
இயற்கை வளங்களை பாதுகாக்கக் கோரி பிரசார இயக்கம்
இயற்கை வளங்களை பாதுகாக்கக் கோரி, திருவண்ணாமலையில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு பிரசார இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை அறிவொளிப் பூங்கா அருகே, பாரம்பரிய விதைகள் மையம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, இயற்கை ஆா்வலா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். இயற்கை ஆா்வலா் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தாா்.
பெண்கள் இணைப்புக் குழுவின் மாவட்ட நிா்வாகி சுமதி, இயற்கை விதை சேகரிப்பாளா்கள் சந்திரசேகரன், முரளி ராஜ், ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளா் பழனி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டு இயற்கை வளங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்துப் பேசினா்.
தொடா்ந்து, இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். இயற்கை வேளாண்மையை முன்னெடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதையடுத்து, 100-க்கும் மேற்பட்டோா் அண்ணா நுழைவு வாயில், வேங்கிக்கால் வழியாக நகரின் முக்கிய பகுதிகளுக்கு பேரணியாகச் சென்று இயற்கை வளங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்த துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
தொடா்ந்து, ஜூன் 2, 3 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது.