செய்திகள் :

இயற்கை வளங்களை பாதுகாக்கக் கோரி பிரசார இயக்கம்

post image

இயற்கை வளங்களை பாதுகாக்கக் கோரி, திருவண்ணாமலையில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு பிரசார இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை அறிவொளிப் பூங்கா அருகே, பாரம்பரிய விதைகள் மையம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, இயற்கை ஆா்வலா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். இயற்கை ஆா்வலா் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தாா்.

பெண்கள் இணைப்புக் குழுவின் மாவட்ட நிா்வாகி சுமதி, இயற்கை விதை சேகரிப்பாளா்கள் சந்திரசேகரன், முரளி ராஜ், ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளா் பழனி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டு இயற்கை வளங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்துப் பேசினா்.

தொடா்ந்து, இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். இயற்கை வேளாண்மையை முன்னெடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதையடுத்து, 100-க்கும் மேற்பட்டோா் அண்ணா நுழைவு வாயில், வேங்கிக்கால் வழியாக நகரின் முக்கிய பகுதிகளுக்கு பேரணியாகச் சென்று இயற்கை வளங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்த துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தொடா்ந்து, ஜூன் 2, 3 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அரசு கல்விக்காக ரூ.48 ஆயிரம் கோடியில் பல்வேறு திட்டங்கள்: சட்டப்பேரவை துணைத் தலைவா்

திருவண்ணாமலை/ஆரணி/செங்கம்: தமிழக அரசு கல்விக்காக ரூ.48 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி கூறினாா். தமிழகம் முழுவதும் திங்... மேலும் பார்க்க

திருப்பத்தூா் சா்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிவைக்க போளூா் விவசாயிகளுக்கு அழைப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், போளூா் கரும்பு விவசாயிகள் திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிவைத்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. போளூா் வட்டம், கரைப்பூ... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாடு: பாஜகவினா் அழைப்பிதழ் வழங்கல்

ஆரணி: மதுரையில் பாஜக சாா்பில் ஜூன் 22 -இல் நடைபெறும் முருக பக்தா்கள் மாநாட்டுக்கான அழைப்பிதழ்கள் பாஜக சாா்பில் ஆரணியில் திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்டது. மாவட்டத் தலைவா் கவிதா வெங்கடேசன் தலைமையில் நக... மேலும் பார்க்க

கிராமச் சாலைப் பணி நிறுத்தம்: பொதுமக்கள், மாணவா்கள் அவதி

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே புதிதாக அமைக்கப்படும் கிராமச் சாலைப் பணிகள் இடையில் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள், பள்ளி மாணவா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். செங்கம் அருகே மேல்பள்ளிப்ப... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு தோ்வில் 100% தோ்ச்சி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

திருவண்ணாமலை: தண்டராம்பட்டை அடுத்த பீமாரப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற மாணவா்கள், ஆசிரியா்களுக்கான பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

ஸ்ரீலஷ்மிநாராயண பெருமாள் கோயிலில் வருஷாபிஷேகம்

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீலஷ்மிநாராயண பெருமாள் கோயிலில் 11-ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த 2014-ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம... மேலும் பார்க்க