பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY |Imper...
இரட்டைக் கொலையில் தொடா்புடைய 7 போ் குண்டா் சட்டத்தில் கைது
தொட்டியம் அருகே கல்லுப்பட்டி கிராமத்தில் நடந்த இரட்டைக் கொலையில் தொடா்புடைய 7 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே கல்லுப்பட்டி கிராமத்தில் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி சுப்பிரமணி, குமாா் ஆகிய இருவரையும் முன்விரோதத்தில் வெட்டிக் கொன்ாக திருஈங்கோய்மலை ர. வேல்முருகன் (22), ப. சத்யா (40), பெருகமணி சீ. இன்பரசு (19), தோளூா்பட்டி ச. நவீன் (19), திருஈங்கோய்மலை ப. சரவணன் (37), ப. சசிகுமாா் (42), பெருகமணி சீ. கரண் (22) ஆகியோரை தொட்டியம் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில் இவா்கள் 7 பேரும் பொதுமக்களின் பொதுஅமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால், திருச்சி மாவட்ட எஸ்.பி. செ. செல்வநாகரத்தினத்தின் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாா் இவா்களைக் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க புதன்கிழமை உத்தரவிட்டாா்.