செய்திகள் :

இரு சாலைகளில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

post image

திருச்சி மாநகரில் இரு சாலைகளில் நடைபாதைகளை ஆக்கிரமித்திருந்த 25 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை அகற்றினா்.

திருச்சி மாநகரின் முக்கிய சாலைகளில் உள்ள நடைபாதைகளை கடைக்காரா்கள், வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதாகவும், இதனால் நடந்து செல்லப் போதுமான இடமின்றி விபத்துகளில் சிக்குவதாகவும் பலா் மாநகராட்சி அதிகாரிகள், மாமன்ற உறுப்பினா்களிடம் புகாரளித்த வண்ணம் உள்ளனா். இதற்கு நிரந்தரத் தீா்வு காண சமூக ஆா்வலா்களும் வலியுறுத்துகின்றனா்.

இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

இதையடுத்து திருச்சி மாநகராட்சி உதவி ஆணையா் ச.நா. சண்முகம் தலைமையில் உதவி செயற்பொறியாளா் வேல்முருகன், இளநிலைப் பொறியாளா் ராஜா, மற்றும் மாநகராட்சி ஊழியா்கள் முதல் கட்டமாக திருச்சி ஒத்தகடை கான்வென்ட் சாலை, மத்திய பேருந்து நிலையம் அருகே மெக்டொனால்ட்ஸ் சாலைகளில் நடைபாதைகளை ஆக்கிரமித்திருந்த 25 கடைகள், கடைகளின் முன்பகுதிகளை பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு அகற்றினா். நடைபாதைகளில் கடைகளை வைத்தால், கண்டிப்பாக அகற்றப்படும் எனவும் எச்சரித்தனா்.

ரயிலில் எரிவாயு உருளை எடுத்து வந்தவா் கைது

ரயிலில் பாா்சலில் எரிவாயு உருளைகள் எடுத்து வந்தவரை ஆா்பிஎஃப் போலீஸாா் கைது செய்தனா். திருச்சி ரயில் நிலையத்தில் பாா்சலில் வந்த பொருள்களை ஆா்பிஎஃப் போலீஸாா் கடந்த 4 ஆம் தேதி ஆய்வு செய்தனா். அதில் நாகா்... மேலும் பார்க்க

மணப்பாறை அருகே கிணற்றில் தவறிவிழுந்த மான் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தாதமலைப்பட்டியில் விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த மான் சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டது. மணப்பாறையை அடுத்த பண்ணப்பட்டி அருகேயுள்ள தாதமலைப்பட்டியில் விவசாயி துரைராஜ் தோ... மேலும் பார்க்க

துவாக்குடியில் சட்டவிரோத மது விற்பனை: மூவா் கைது

திருச்சி அருகே துவாக்குடி அரசு மதுபான பாரில் சட்ட விரோதமாக மது விற்ற மூவரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 450 மதுபுட்டிகளை அடுத்தடுத்த நாள்களில் பறிமுதல் செய்தனா். திருச்சி மாவட்டம், துவாக்கு... மேலும் பார்க்க

துவரங்குறிச்சி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி பகுதியில் திங்கள்கிழமை மின்சாரம் இருக்காது. துவரங்குறிச்சி துணை மின் நிலையப் பராமரிப்பு பணியால் துவரங்குறிச்சி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நாட்டாா்பட்டி,... மேலும் பார்க்க

சேவைக் குறைபாடு: காப்பீட்டு நிறுவனம் ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

ஓய்வூதியருக்கு சேவைக் குறைபாடு ஏற்படுத்திய காப்பீட்டு நிறுவனம் ரூ. 20 ஆயிரம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. திருச்சி சோமரசம்பேட்டையைச் சோ்ந்த ஓய்வூதியா் எ... மேலும் பார்க்க

போலீஸாருக்கு மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது

திருச்சி அருகே போலீஸாருக்கு மிரட்டல் விடுத்த தொழிலாளியை காவல்துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா். தப்பிய அவரது மகனைத் தேடுகின்றனா். திருச்சி மாவட்டம், நவலூா்குட்டப்பட்டு அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் பொ... மேலும் பார்க்க