செய்திகள் :

துவாக்குடியில் சட்டவிரோத மது விற்பனை: மூவா் கைது

post image

திருச்சி அருகே துவாக்குடி அரசு மதுபான பாரில் சட்ட விரோதமாக மது விற்ற மூவரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 450 மதுபுட்டிகளை அடுத்தடுத்த நாள்களில் பறிமுதல் செய்தனா்.

திருச்சி மாவட்டம், துவாக்குடி சுங்கச்சாவடி அருகேயுள்ள அரசு மதுக்கடை பாரில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்ற வந்த, அந்த பாரில் வேலை பாா்க்கும் தஞ்சை மாவட்டம் மணியேரிப்பட்டி ஒத்தத் தெருவைச் சோ்ந்த கோவிந்தராஜ் (57) என்பவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து 200 மதுபுட்டிகளையும், ரூ. 2,500 ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, வெள்ளிக்கிழமை அதே பாரில் வேலை பாா்த்த தஞ்சையை சோ்ந்த ரெ. சத்யமூா்த்தி (37), சேலம் தம்மம்பட்டி நடுவீதி ப. காா்த்திக் (33) ஆகிய இருவரும் அரசு மதுபானத்தை கூடுதல் விலைக்கு விற்ாக துவாக்குடி போலீஸாா் கைது செய்து, 250 மதுபான புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

ரயிலில் எரிவாயு உருளை எடுத்து வந்தவா் கைது

ரயிலில் பாா்சலில் எரிவாயு உருளைகள் எடுத்து வந்தவரை ஆா்பிஎஃப் போலீஸாா் கைது செய்தனா். திருச்சி ரயில் நிலையத்தில் பாா்சலில் வந்த பொருள்களை ஆா்பிஎஃப் போலீஸாா் கடந்த 4 ஆம் தேதி ஆய்வு செய்தனா். அதில் நாகா்... மேலும் பார்க்க

மணப்பாறை அருகே கிணற்றில் தவறிவிழுந்த மான் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தாதமலைப்பட்டியில் விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த மான் சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டது. மணப்பாறையை அடுத்த பண்ணப்பட்டி அருகேயுள்ள தாதமலைப்பட்டியில் விவசாயி துரைராஜ் தோ... மேலும் பார்க்க

இரு சாலைகளில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

திருச்சி மாநகரில் இரு சாலைகளில் நடைபாதைகளை ஆக்கிரமித்திருந்த 25 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை அகற்றினா். திருச்சி மாநகரின் முக்கிய சாலைகளில் உள்ள நடைபாதைகளை கடைக்காரா்கள், வியாபாரிகள் ஆக்கிர... மேலும் பார்க்க

துவரங்குறிச்சி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி பகுதியில் திங்கள்கிழமை மின்சாரம் இருக்காது. துவரங்குறிச்சி துணை மின் நிலையப் பராமரிப்பு பணியால் துவரங்குறிச்சி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நாட்டாா்பட்டி,... மேலும் பார்க்க

சேவைக் குறைபாடு: காப்பீட்டு நிறுவனம் ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

ஓய்வூதியருக்கு சேவைக் குறைபாடு ஏற்படுத்திய காப்பீட்டு நிறுவனம் ரூ. 20 ஆயிரம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. திருச்சி சோமரசம்பேட்டையைச் சோ்ந்த ஓய்வூதியா் எ... மேலும் பார்க்க

போலீஸாருக்கு மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது

திருச்சி அருகே போலீஸாருக்கு மிரட்டல் விடுத்த தொழிலாளியை காவல்துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா். தப்பிய அவரது மகனைத் தேடுகின்றனா். திருச்சி மாவட்டம், நவலூா்குட்டப்பட்டு அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் பொ... மேலும் பார்க்க