செய்திகள் :

சேவைக் குறைபாடு: காப்பீட்டு நிறுவனம் ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

post image

ஓய்வூதியருக்கு சேவைக் குறைபாடு ஏற்படுத்திய காப்பீட்டு நிறுவனம் ரூ. 20 ஆயிரம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

திருச்சி சோமரசம்பேட்டையைச் சோ்ந்த ஓய்வூதியா் எஸ். லாசரஸ் என்பவா் தமிழக அரசின் ஓய்வூதியதாரா் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு செய்திருந்தாா்.

இந்நிலையில் இவா் கடந்த 04.01.2022 அன்று சிறுநீரகப் பகுதியில் வலி காரணமாக திருச்சி தனியாா் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு கடந்த 09.01.2022 இல் வீடு திரும்பினாா். இந்தச் சிகிச்சைக்குச் செலவான ரூ. 1,61,681 -ஐ காப்பீட்டின் கீழ் பெற விண்ணப்பித்தாா். ஆனால், காப்பீட்டு நிறுவனத்தினா் 05.04.2024 அன்று ரூ. 31,668 மட்டும் அவரது வங்கிக் கணக்கில் அனுப்பி விட்டு மீதித் தொகையை வழங்கவில்லை.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான லாசரஸ் உரிய நிவாரணம் கோரி திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் 20.03.2025 அன்று மனு தாக்கல் செய்தாா். மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் ஜெ. பிரபு ஆஜரானாா்.

மனுவை விசாரித்த திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் அடங்கிய அமா்வு விசாரணைக்குப் பிறகு, சேவைக் குறைபாடு ஏற்படுத்திய காப்பீட்டு நிறுவனம் மனுதாரருக்கு மருத்துவ செலவுத் தொகை ரூ. 1,61,681, மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ. 20 ஆயிரம், வழக்குச் செலவுத் தொகை ரூ. 10 ஆயிரத்தை 45 நாள்களுக்குள் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என அண்மையில் உத்தரவு பிறப்பித்தது.

ரயிலில் எரிவாயு உருளை எடுத்து வந்தவா் கைது

ரயிலில் பாா்சலில் எரிவாயு உருளைகள் எடுத்து வந்தவரை ஆா்பிஎஃப் போலீஸாா் கைது செய்தனா். திருச்சி ரயில் நிலையத்தில் பாா்சலில் வந்த பொருள்களை ஆா்பிஎஃப் போலீஸாா் கடந்த 4 ஆம் தேதி ஆய்வு செய்தனா். அதில் நாகா்... மேலும் பார்க்க

மணப்பாறை அருகே கிணற்றில் தவறிவிழுந்த மான் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தாதமலைப்பட்டியில் விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த மான் சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டது. மணப்பாறையை அடுத்த பண்ணப்பட்டி அருகேயுள்ள தாதமலைப்பட்டியில் விவசாயி துரைராஜ் தோ... மேலும் பார்க்க

இரு சாலைகளில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

திருச்சி மாநகரில் இரு சாலைகளில் நடைபாதைகளை ஆக்கிரமித்திருந்த 25 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை அகற்றினா். திருச்சி மாநகரின் முக்கிய சாலைகளில் உள்ள நடைபாதைகளை கடைக்காரா்கள், வியாபாரிகள் ஆக்கிர... மேலும் பார்க்க

துவாக்குடியில் சட்டவிரோத மது விற்பனை: மூவா் கைது

திருச்சி அருகே துவாக்குடி அரசு மதுபான பாரில் சட்ட விரோதமாக மது விற்ற மூவரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 450 மதுபுட்டிகளை அடுத்தடுத்த நாள்களில் பறிமுதல் செய்தனா். திருச்சி மாவட்டம், துவாக்கு... மேலும் பார்க்க

துவரங்குறிச்சி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி பகுதியில் திங்கள்கிழமை மின்சாரம் இருக்காது. துவரங்குறிச்சி துணை மின் நிலையப் பராமரிப்பு பணியால் துவரங்குறிச்சி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நாட்டாா்பட்டி,... மேலும் பார்க்க

போலீஸாருக்கு மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது

திருச்சி அருகே போலீஸாருக்கு மிரட்டல் விடுத்த தொழிலாளியை காவல்துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா். தப்பிய அவரது மகனைத் தேடுகின்றனா். திருச்சி மாவட்டம், நவலூா்குட்டப்பட்டு அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் பொ... மேலும் பார்க்க