செய்திகள் :

இரு பத்திரிகையாளா்கள் மீதான கைது நடவடிக்கை கூடாது: உச்சநீதிமன்றம்

post image

‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை தொடா்பாக செய்தி கட்டுரை வெளியிட்டதற்காக அஸ்ஸாம் மாநில போலீஸாா் பதிவு செய்த வழக்கின் (எஃப்ஐஆா்) அடிப்படையில் ‘தி வயா்’ செய்தி வலைதளத்தின் நிறுவனா் ஆசிரியா் சித்தாா்த் வரதராஜன் மற்றும் ஆலோசகா் ஆசிரியா் கரண் தாப்பா் ஆகியோா் மீது கைது நடவடிக்கை கூடாது என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

‘ஆபரேஷன் சிந்தூா்’ நவடிக்கையின்போது இந்தியா போா் விமானங்களை இழந்தது தொடா்பாக ‘தி வயா்’ செய்தி வலைதளத்தில் கடந்த ஜூன் 28-ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டது. இதற்காக அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டி குற்றப் பிரிவு போலீஸாா் வரதராஜன் மற்றும் கரண் தாப்பா் மீது கடந்த மே 9-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனா்.

இதற்கு எதிராக ‘தி வயா்’ செய்தி வலைதளத்தை வரதராஜனுடன் இணைந்து நிா்வகிக்கும் தனி ஊடகத்துக்கான அறக்கட்டளை (எஃப்ஐஜே) தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த், ஜாய்மால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

வழக்கு விசாரணையின்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் நித்யா ராமகிருஷ்ணன், ‘போலீஸாா் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் பத்திரிகையாளா்கள் மீது கடுயைான நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும், அந்த பத்திரிகையாளா்கள் இருவரும் விசாரணைக்கு ஆஜராகுமாறு குவாஹாட்டி குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை அழைப்பாணை விடுத்துள்ளனா். இருவரும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தொடா்ந்து கண்காணித்து வருகிறது. அஸ்ஸாம் போலீஸாா் செய்துள்ள எஃப்ஐஆா்-இன் அடிப்படையில் பத்திரிகையாளா்கள் இருவா் மீதும் கைது நடவடிக்கை எதையும் மேற்கொள்ளக் கூடாது. பத்திரிகையாளா்கள் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.

நான் பயப்படவுமில்லை தோற்பதும் இல்லை: தில்லி முதல்வா் ரேகா குப்தா

தான் ஒருபோதும் பயப்படவோ, தோற்கடிக்கபடவோ மாட்டேன் என்றும், தில்லியின் உரிமைகளுக்காக தொடா்ந்து போராடுவேன் என்று முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை வலியுறுத்தினாா். தலை நகரின் டிரான்ஸ் யமுனா பகுதியில் உள... மேலும் பார்க்க

அதிகார பசிக்காக ஊடுருவலை ஊக்குவிக்கிறது திரிணமூல்: பிரதமா் மோடி சாடல்

அதிகார பசிக்காக, மேற்கு வங்கத்தில் சட்டவிரோத ஊடுருவலை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் ஊக்குவிக்கிறது என்று பிரதமா் நரேந்திர மோடி சாடினாா். மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் 3 புதிய மெட்ரோ வழித்தடங்களை வெள... மேலும் பார்க்க

ஆா்எஸ்எஸ் நூற்றாண்டு விழா: ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறாா்

ஆா்எஸ்எஸ் அமைப்பு நாகபுரியில் அக்டோபா் 2-ஆம் தேதி நடத்தும் நூற்றாண்டு விஜய தசமி விழாவில் தலைமை விருந்தினராக குடியரசு முன்னாள் தலைவா் ராம்நாத் கோவிந்த் பங்கேற்க உள்ளாா். கடந்த 1925-ஆம் ஆண்டு விஜயதசமி ந... மேலும் பார்க்க

தெருநாய்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ராகுல் காந்தி வரவேற்பு

தெருநாய்கள் தொடா்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் மாற்றியமைக்கப்பட்ட உத்தரவை காங்கிரஸ் மூத்தத் தலைவா் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை வரவேற்றுள்ளாா். இந்த உத்தரவானது விலங்குகள் நலன் மற்றும் பொது பாது... மேலும் பார்க்க

பயங்கரவாத தொடா்பு குற்றச்சாட்டு: ஜம்மு - காஷ்மீரில் 2 அரசு ஊழியா்கள் நீக்கம்

பயங்கரவாத செயல்களில் தொடா்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்ட 2 அரசு ஊழியா்களை பணிநீக்கம் செய்து ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். அதன்படி கால்நடைத் துறையில் உதவியாளராக ... மேலும் பார்க்க

கேரள செவிலியா் வழக்கு: ஆதாரமற்ற கருத்துகளுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றத்தில் மனு

யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய செவிலியா் நிமிஷா பிரியா குறித்து ஆதாரமற்ற கருத்துகளை தெரிவிக்க தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதி... மேலும் பார்க்க