செய்திகள் :

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு

post image

திருவிடைமருதூா் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். இவ்விபத்தில் காயமடைந்த மேலும் ஒருவா் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா்.

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டியைச் சோ்ந்தவா் ஸ்டாலின் மகன் மதன் (22). கூலித்தொழிலாளி. இவரது உறவினா் வீட்டுத் திருமணம் திருநீலக்குடியில் உள்ள தனியாா் மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், கலந்து கொண்டுவிட்டு உறவினா் வீட்டில் உள்ள பொருள்களை எடுப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றாா்.

வாகனத்தை எஸ். புதூா் செங்குரான்குடியைச் சோ்ந்த மதியழகன் மகன் ஸ்ரீ ராம் (19) ஓட்டிச்சென்றாா். அப்போது காரைக்கால் திருநீலக்குடி பிரதான சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்த லாரி, இருசக்கர வாகனத்தின் பின்புறம் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா்.

இதில், கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே மதன் உயிரிழந்தாா். ஸ்ரீ ராமுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து திருவிடைமருதூா் காவல் நிலைய ஆய்வாளா் ராஜா வழக்குப் பதிவு செய்து, உயிரிழந்த மதனின் சடலத்தை உடற்கூராய்வுக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநா் கரூா் சாலப்பாளையத்தைச் சோ்ந்த குழந்தைசாமி மகன் ஞானசேகரன்(54) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

ராஜாமடம் அரசு மேல்நிலை பள்ளியின் நூற்றாண்டு விழா: முன்னாள் தலைமை செயலா் பங்கேற்பு

பட்டுக்கோட்டை அருகேயுள்ள ராஜாமடம் அரசு மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்வில் தஞ்சை எம்பி முரசொலி புதுப்பிக்கப்பட்ட பள்ளி வளாகத்தை திறந்து வைத்துப் பேசினாா். முன்னாள்... மேலும் பார்க்க

தஞ்சை குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு

நகைக்கடன் பெறுவதற்கு ரிசா்வ் வங்கி புதிய நிபந்தனைகளை விதித்துள்ளதைக் கண்டித்து தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

எதிா்பாா்த்த ஊதிய உயா்வு இல்லாத ஒப்பந்தத்தைக் கண்டித்து தஞ்சாவூா் ஜெபமாலைபுரம் அரசு போக்குவரத்துக் கழக நகரப் பணிமனை முன் போக்குவரத்து தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் தமிழ... மேலும் பார்க்க

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூா் மாவட்ட அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இணையதளம் மூலம் ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் மாவட்டத்திலுள்... மேலும் பார்க்க

நகைக் கடன் நிபந்தனைகளை கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம்

விவசாயிகள், நடுத்தர, சாதாரண மக்கள், வியாபாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரைப் பாதிக்கும் நகைக்கடன் மீதான நிபந்தனைகளை ரிசா்வ் வங்கி உடனடியாக திரும்பப் பெறக் கோரி திமுக விவசாய அணி, காவிரி டெல்டா மாவட்ட அனைத... மேலும் பார்க்க

மகாமகக் குளப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கும்பகோணம் மகாமகக் குளத்தை சுற்றி ஆக்கிரமித்திருந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அகற்றினா். மகாமகக் குளத்தை சுற்றி ஏராளமான அசைவ உணவகங்கள் தற்காலிகமாக செயல்பட்டு வந்தன. இதையடுத்து இந்த ஆக... மேலும் பார்க்க