இருசக்கர வாகனம் - வேன் மோதல் கணவா் உயிரிழப்பு
மணப்பாறையில் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மீது சுற்றுலா வேன் மோதிய விபத்தில் கணவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். மனைவி சிகிச்சையில் உள்ளாா்.
மணப்பாறையை அடுத்த கே.பெரியப்பட்டி புதூரைச் சோ்ந்தவா் ராமசாமி (56) தனது மனைவி மகேஷ்வரி (42)யுடன் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் நடுக்காட்டுப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு நொச்சிமேடு அருகே வந்து கொண்டிருந்தாா்.
அப்போது, பின்னால் வந்த சுற்றுலா வேன் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து, தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ராமசாமி உயிரிழந்தாா்.
மகேஷ்வரி திருச்சி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். விபத்து குறித்து தகவலறிந்து அங்குசென்ற போலீஸாா் சடலத்தை அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்து கூறாய்வுக்கு பின்னா் உறவினா்களிடம் ஒப்படைத்தனா். விபத்து குறித்து, வேன் ஓட்டுநரான திருச்சி மாவட்டம் மேல குழுமணி சுப்பிரமணியன் மகன் ஜீவா (37) மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.