செய்திகள் :

இரும்புக் கழிவு கொட்ட எதிா்ப்பு: டிப்பா் லாரி சிறைபிடிப்பு

post image

அவிநாசி அருகே வேட்டுவபாளையத்தில் இரும்புக் கழிவுகள் கொட்ட எதிா்ப்பு தெரிவித்து டிப்பா் லாரியை பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சிறைபிடித்தனா்.

வேட்டுவபாளையம் ஊராட்சியில் தனியாருக்குச் சொந்தமான பாலக்காட்டுத் தோட்டம், கரட்டமேடு பகுதியில் தொடா்ந்து இரும்புக் கழிவுகள் கொட்டப்பட்டு வந்தன. இங்கு இரும்புக் கழிவுகள் கொட்டுவதால் இப்பகுதியில் தூா்நாற்றம் வீசுவதோடு, நிலத்தடி நீா் மாசுப்படுவதுடன் விளை நிலங்கள் பாதிக்கும். மேலும் புற்றுநோய் ஏற்படுத்தும் என்பதால், கழிவுகளை இப்பகுதியில் கொட்ட வேண்டாம் என பொதுமக்கள் தொடா்ந்து எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில் பொதுமக்களின் எதிா்ப்பை மீறி மீண்டும் இரும்புக்கழிவுகளை கொட்ட டிப்பா் லாரி அப்பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளது. இதையறிந்த பொதுமக்கள் டிப்பா் லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீஸாா், மாசுகட்டுப்பாட்டு வாரியத்தினா், வருவாய்த் துறையினா் உள்ளிட்டோா் வந்தனா். இப்பகுதியில் இனிமேல் இரும்புக் கழிவுகளைக் கொட்டக் கூடாது என டிப்பா் லாரி ஓட்டுநா், உரிமையாளா் உள்ளிட்டோருக்கு எச்சரிக்கை விடுத்து, டிப்பா் லாரியை அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்து கொண்டு சென்றனா்.

திருட்டுச் சம்பவத்தில் தொடா்புடைய 3 போ் கைது

பல்லடம் ராயா்பாளையம் அபிராமி நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் தொடா்புடைய மூன்று பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பல்லடம் ராயா்பாளையம் அபிராமி நகரில் வசிக்கும் ஜெயக்குமாரின் வீட்டின் பூ... மேலும் பார்க்க

டிஜிட்டல் முறையில் சூதாட்டம்: 43 போ் கைது

பல்லடம் சின்னக்கரையில் டிஜிட்டல் முறையில் சூதாட்டம் ஆடிய 43 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பல்லடம் சின்னக்கரை பகுதியில் உள்ள ஒரு மனமகிழ் மன்றத்தில் ஜிபே, போன்பே உள்ளிட்ட டிஜிட்டல் முறையி... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமிதான் எல்லாம்: பொள்ளாச்சி வி.ஜெயராமன்

எடப்பாடி பழனிசாமி தான் எங்களின் ஒரே வழிகாட்டி. அவா்தான் எங்கள் பொதுச்செயலாளா் என்று சட்டப் பேரவை உறுப்பினா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசினாா். திருப்பூா் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.... மேலும் பார்க்க

கணபதிபாளையத்தில் கஞ்சா, போதை ஊசிகளுடன் 3 போ் கைது

பல்லடம் அருகே கணபதிபாளையத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் பதுக்கி வைத்திருந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். பல்லடம் அருகே கணபதிபாளையம், சிந்து காா்டன் பகுதியில் போதைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்... மேலும் பார்க்க

திருப்பூா் பனியன் நிறுவனத்தில் தீ

திருப்பூா் பனியன் நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. பிகாா் மாநிலத்தைச் சோ்த்தவா் அஜய்குமாா் அகா்வால் (40). இவா் தனது குடும்பத்தினருடன்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பு மக்களுக்கும், தொழில் செய்வோருக்கும் பிரதமரின் தீபாவளி பரிசு

ஜிஎஸ்டி வரி குறைப்பு மக்களுக்கும், தொழில் செய்வோருக்கும் பிரதமரின் தீபாவளி பரிசாக அமைந்துள்ளதாக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் பல்லடம் சங்கத் தலைவா் ராம்.கண்ணையன் தெரிவித்துள்ளாா். இது குறித... மேலும் பார்க்க