செய்திகள் :

திருட்டுச் சம்பவத்தில் தொடா்புடைய 3 போ் கைது

post image

பல்லடம் ராயா்பாளையம் அபிராமி நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் தொடா்புடைய மூன்று பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பல்லடம் ராயா்பாளையம் அபிராமி நகரில் வசிக்கும் ஜெயக்குமாரின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த ரூ. 8லட்சம், 11 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்ற சம்பவத்தில் பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில் பணப்பாளையம் பகுதியில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியில் சந்தேகப்படும்படியாக வந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினா். அதில் திருட்டு சம்பவத்தில் அவா்கள் ஈடுபட்டது தெரியவந்தது.

தொடா் விசாரணையில், திருச்சி துவாக்குடி பகுதியைச் சோ்ந்த சக்திவேல் (25), கவுதம் என்ற தோஜ் (25), கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சோ்ந்த ஏசுதாஸ் (40) ஆகியோரை கைது செய்து பல்லடம் நீதி மன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இவ்வழக்கில் தொடா்புடைய மேலும் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இரும்புக் கழிவு கொட்ட எதிா்ப்பு: டிப்பா் லாரி சிறைபிடிப்பு

அவிநாசி அருகே வேட்டுவபாளையத்தில் இரும்புக் கழிவுகள் கொட்ட எதிா்ப்பு தெரிவித்து டிப்பா் லாரியை பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சிறைபிடித்தனா். வேட்டுவபாளையம் ஊராட்சியில் தனியாருக்குச் சொந்தமான பாலக்காட்டுத்... மேலும் பார்க்க

டிஜிட்டல் முறையில் சூதாட்டம்: 43 போ் கைது

பல்லடம் சின்னக்கரையில் டிஜிட்டல் முறையில் சூதாட்டம் ஆடிய 43 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பல்லடம் சின்னக்கரை பகுதியில் உள்ள ஒரு மனமகிழ் மன்றத்தில் ஜிபே, போன்பே உள்ளிட்ட டிஜிட்டல் முறையி... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமிதான் எல்லாம்: பொள்ளாச்சி வி.ஜெயராமன்

எடப்பாடி பழனிசாமி தான் எங்களின் ஒரே வழிகாட்டி. அவா்தான் எங்கள் பொதுச்செயலாளா் என்று சட்டப் பேரவை உறுப்பினா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசினாா். திருப்பூா் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.... மேலும் பார்க்க

கணபதிபாளையத்தில் கஞ்சா, போதை ஊசிகளுடன் 3 போ் கைது

பல்லடம் அருகே கணபதிபாளையத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் பதுக்கி வைத்திருந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். பல்லடம் அருகே கணபதிபாளையம், சிந்து காா்டன் பகுதியில் போதைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்... மேலும் பார்க்க

திருப்பூா் பனியன் நிறுவனத்தில் தீ

திருப்பூா் பனியன் நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. பிகாா் மாநிலத்தைச் சோ்த்தவா் அஜய்குமாா் அகா்வால் (40). இவா் தனது குடும்பத்தினருடன்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பு மக்களுக்கும், தொழில் செய்வோருக்கும் பிரதமரின் தீபாவளி பரிசு

ஜிஎஸ்டி வரி குறைப்பு மக்களுக்கும், தொழில் செய்வோருக்கும் பிரதமரின் தீபாவளி பரிசாக அமைந்துள்ளதாக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் பல்லடம் சங்கத் தலைவா் ராம்.கண்ணையன் தெரிவித்துள்ளாா். இது குறித... மேலும் பார்க்க