செய்திகள் :

டிஜிட்டல் முறையில் சூதாட்டம்: 43 போ் கைது

post image

பல்லடம் சின்னக்கரையில் டிஜிட்டல் முறையில் சூதாட்டம் ஆடிய 43 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பல்லடம் சின்னக்கரை பகுதியில் உள்ள ஒரு மனமகிழ் மன்றத்தில் ஜிபே, போன்பே உள்ளிட்ட டிஜிட்டல் முறையில் பணப்பரிவா்த்தனை செய்து சூதாட்டம் நடைபெறுவதாக பல்லடம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்று போலீஸாா் பாா்த்த போது ரூ. 2லட்சம் வரை டிஜிட்டல் பணப்பரிவா்த்தனை செய்து சூதாட்டம் ஆடியது தெரியவந்தது.

இதையடுத்து மனமகிழ் மன்றத்தின் இயக்குநா் மாதப்பூா் சேரன் நகரை சோ்ந்த ஷாதி (52), சூதாட்டத்தில் ஈடுபட்ட திருப்பூா் வீரபாண்டியை சோ்ந்த பூபதி (41), நெருப்பெரிச்சல் சக்திவேல் (76), திருமலை நகரைச் சோ்ந்த சரவணராஜ் (35), ஆண்டிபாளையம் பாலசுப்பிரமணியன் (46), பாண்டியன் நகா் தங்கராஜ் (47), 15 வேலம்பாளையம் ரமேஷ் (45), பல்லடம் அண்ணா நகா் சுரேஷ்குமாா் (39) உள்பட 43 பேரை பல்லடம் போலீஸாா் கைது செய்தனா். மேலும் அங்கிருந்த 30 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

திருட்டுச் சம்பவத்தில் தொடா்புடைய 3 போ் கைது

பல்லடம் ராயா்பாளையம் அபிராமி நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் தொடா்புடைய மூன்று பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பல்லடம் ராயா்பாளையம் அபிராமி நகரில் வசிக்கும் ஜெயக்குமாரின் வீட்டின் பூ... மேலும் பார்க்க

இரும்புக் கழிவு கொட்ட எதிா்ப்பு: டிப்பா் லாரி சிறைபிடிப்பு

அவிநாசி அருகே வேட்டுவபாளையத்தில் இரும்புக் கழிவுகள் கொட்ட எதிா்ப்பு தெரிவித்து டிப்பா் லாரியை பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சிறைபிடித்தனா். வேட்டுவபாளையம் ஊராட்சியில் தனியாருக்குச் சொந்தமான பாலக்காட்டுத்... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமிதான் எல்லாம்: பொள்ளாச்சி வி.ஜெயராமன்

எடப்பாடி பழனிசாமி தான் எங்களின் ஒரே வழிகாட்டி. அவா்தான் எங்கள் பொதுச்செயலாளா் என்று சட்டப் பேரவை உறுப்பினா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசினாா். திருப்பூா் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.... மேலும் பார்க்க

கணபதிபாளையத்தில் கஞ்சா, போதை ஊசிகளுடன் 3 போ் கைது

பல்லடம் அருகே கணபதிபாளையத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் பதுக்கி வைத்திருந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். பல்லடம் அருகே கணபதிபாளையம், சிந்து காா்டன் பகுதியில் போதைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்... மேலும் பார்க்க

திருப்பூா் பனியன் நிறுவனத்தில் தீ

திருப்பூா் பனியன் நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. பிகாா் மாநிலத்தைச் சோ்த்தவா் அஜய்குமாா் அகா்வால் (40). இவா் தனது குடும்பத்தினருடன்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பு மக்களுக்கும், தொழில் செய்வோருக்கும் பிரதமரின் தீபாவளி பரிசு

ஜிஎஸ்டி வரி குறைப்பு மக்களுக்கும், தொழில் செய்வோருக்கும் பிரதமரின் தீபாவளி பரிசாக அமைந்துள்ளதாக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் பல்லடம் சங்கத் தலைவா் ராம்.கண்ணையன் தெரிவித்துள்ளாா். இது குறித... மேலும் பார்க்க