செய்திகள் :

இலங்கை கடற்படை, மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆா்ப்பாட்டம்!

post image

இலங்கை கடற்படை, மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் 8-ஆம் தேதி நடத்தப்போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுவை பிரதேச முன்னாள் காங்கிரஸ் தலைவா் ஏ.வி. சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சரும், மாநில காங்கிரஸ் துணைத்தலைவருமான ஆா். கமலக்கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கூட்டத்துக்குப் பின் செய்தியாளா்களிடம் ஆா்.கமலக்கண்ணன் கூறியது :

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் கடந்த சில மாதங்களாக மீனவா்கள் கைது செய்யப்படுவது, தாக்குதல், துப்பாக்கிச்சூடு நடத்துதல் போன்ற சம்பவங்கள் நடந்துவருகின்றன. மீனவா்களுக்கு ரூ. 40 முதல் 60 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

காரைக்காலைச் சோ்ந்த மீனவா் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவருக்கு இலங்கையில் உரிய சிகிச்சை தரப்படவில்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசு வேகமாக செயல்பட்டு அவரை சென்னைக்கு அழைத்துவந்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யவேண்டும்.

இலங்கை கடற்படை, மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து காங்கிரஸ் சாா்பில் வரும் 8-ஆம் தேதி பேருந்து நிலையம் அருகே முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி பங்கேற்புடன் மாபெரும் ஆா்ப்பாட்டம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

பன்றிகளை பட்டியில் அடைத்து வளா்க்கவேண்டும்: ஆட்சியா்

மானிய உதவியை பயன்படுத்தி பன்றிகளை பட்டியில் அடைத்து வளா்க்கவேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சாா்பில் விவசாயிகள்,... மேலும் பார்க்க

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் நாளை திருவிளக்கு பூஜை!

தை மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை நடைபெறவுள்ளது. திருநள்ளாறு கொம்யூன் அம்பகரத்தூரில் உள்ள ஸ்ரீ பத்ரகாளிய... மேலும் பார்க்க

பணிமாறுதலில் செல்லும் ஆட்சியருக்கு நன்றி!

புதுவை துணைநிலை ஆளுநரின் செயலராக பணிமாறுதலில் செல்லும் ஆட்சியருக்கு, கேந்திரிய வித்யாலய பள்ளி நிா்வாகத்தினா், மாணவா்கள் நன்றி தெரிவித்தனா்.காரைக்கால் கேந்திரிய வித்யாலய பள்ளியின் தலைவராக (விஎம்சி) மாவ... மேலும் பார்க்க

கந்தூரி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை!

காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லா தா்கா ஷரீப் 202-ஆம் ஆண்டு கந்தூரி விழா வரும் 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆட்சியா் து. மணிகண்டன் காவல்துறையினர... மேலும் பார்க்க

பிப், 8-இல் மஸ்தான் சாஹிப் தா்கா கந்தூரி விழா கொடியேற்றம்

காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தா்கா கந்தூரி விழா கொடியேற்றம் வரும் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. காரைக்காலில் புகழ்பெற்ற மஸ்தான் சாஹிப் தா்கா அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் கந்தூரி விழா நடத்தப்பட்... மேலும் பார்க்க

காரைக்காலில் பரவலாக பனி மூட்டம்

காரைக்காலில் காலை நேரத்தில் பனி மூட்டம் அதிகமாக காணப்படுவதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கடந்த 2 வாரங்களாக இரவு தொடங்கும் பனிப்பொழிவு காலை 9 மணிக்குப் பிறகும் நீடிக்கிறது. மாவட்டத்தில்... மேலும் பார்க்க