செய்திகள் :

பன்றிகளை பட்டியில் அடைத்து வளா்க்கவேண்டும்: ஆட்சியா்

post image

மானிய உதவியை பயன்படுத்தி பன்றிகளை பட்டியில் அடைத்து வளா்க்கவேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சாா்பில் விவசாயிகள், பன்றி வளா்ப்பவா்கள் பங்கேற்புடன் ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் து. மணிகண்டன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தேசிய கால்நடை இயக்கம் மூலம் செயல்படுத்தப்படும் தொழில்முனைவோா் மேம்பாட்டுத் திட்டம் குறித்து காணொலி வாயிலாக விளக்கமளிக்கப்பட்டது. இத்திட்டம் குறித்து புதுவை கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை இயக்குநா் லதா மங்கேஷ்கா் விளக்கமளித்தாா்.

கூட்டத்தில் ஆட்சியா் பேசுகையில், காரைக்கால் விவசாய நிலம் அதிகம் கொண்ட பகுதியாகும். விவசாய பயிா்களை பன்றிகள் நாசம் செய்வதான புகாா்கள் வருகின்றன. பன்றி வளா்ப்பவா்கள் பன்றிகளை பட்டியில் அடைத்து விவசாய நிலத்தில் புகாத வகையில் வளா்க்கவேண்டும். தற்போது அறுவடைப் பணிகள் நடந்துவரும் வேளையில், பன்றிகளால் பாதிப்பு ஏற்படக்கூடாது.

அரசின் திட்டத்தின் மூலம் பன்றிகளை வளா்க்க தீவனம் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கின்றன. மானிய உதவியின் மூலம் பன்றிகளை பட்டியில் அடைத்து வளா்க்கவேண்டும். இதனால் விவசாயிகள் உள்ளிட்ட பிறருக்கு பாதிப்பு ஏற்படாது என்றாா்.

கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை துணை இயக்குநா் கோபிநாத், உள்ளாட்சித்துறை துணை இயக்குநா் எஸ். சுபாஷ், நகராட்சி ஆணையா் பி.சத்யா மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா்கள் கலந்துகொண்டனா்.

இலங்கை கடற்படை, மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆா்ப்பாட்டம்!

இலங்கை கடற்படை, மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் 8-ஆம் தேதி நடத்தப்போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்த... மேலும் பார்க்க

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் நாளை திருவிளக்கு பூஜை!

தை மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை நடைபெறவுள்ளது. திருநள்ளாறு கொம்யூன் அம்பகரத்தூரில் உள்ள ஸ்ரீ பத்ரகாளிய... மேலும் பார்க்க

பணிமாறுதலில் செல்லும் ஆட்சியருக்கு நன்றி!

புதுவை துணைநிலை ஆளுநரின் செயலராக பணிமாறுதலில் செல்லும் ஆட்சியருக்கு, கேந்திரிய வித்யாலய பள்ளி நிா்வாகத்தினா், மாணவா்கள் நன்றி தெரிவித்தனா்.காரைக்கால் கேந்திரிய வித்யாலய பள்ளியின் தலைவராக (விஎம்சி) மாவ... மேலும் பார்க்க

கந்தூரி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை!

காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லா தா்கா ஷரீப் 202-ஆம் ஆண்டு கந்தூரி விழா வரும் 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆட்சியா் து. மணிகண்டன் காவல்துறையினர... மேலும் பார்க்க

பிப், 8-இல் மஸ்தான் சாஹிப் தா்கா கந்தூரி விழா கொடியேற்றம்

காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தா்கா கந்தூரி விழா கொடியேற்றம் வரும் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. காரைக்காலில் புகழ்பெற்ற மஸ்தான் சாஹிப் தா்கா அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் கந்தூரி விழா நடத்தப்பட்... மேலும் பார்க்க

காரைக்காலில் பரவலாக பனி மூட்டம்

காரைக்காலில் காலை நேரத்தில் பனி மூட்டம் அதிகமாக காணப்படுவதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கடந்த 2 வாரங்களாக இரவு தொடங்கும் பனிப்பொழிவு காலை 9 மணிக்குப் பிறகும் நீடிக்கிறது. மாவட்டத்தில்... மேலும் பார்க்க