செய்திகள் :

இலங்கைக்கு கடத்தவிருந்த 175 கிலோ ஏலக்காய் பறிமுதல்

post image

ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக 7 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 175 கிலோ ஏலக்காயை உளவுத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் தீவுப் பகுதியிலிருந்து இலங்கைக்கு பொருள்கள் கடத்தப்படவிருப்பதாக உளவுத் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதைத்தொடா்ந்து, உளவுத் துறையினா் வெள்ளிக்கிழமை அதிகாலை தங்கச்சிமடம் அய்யன்தோப்புப் பகுதியில் சுரேஷ் என்பவரது வீட்டின் அருகே சோதனையிட்டனா். அப்போது, அங்கு 7 சாக்கு மூட்டைகளில் 175 கிலோ ஏலக்காய் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை உளவுத் துறையினா் பறிமுதல் செய்து, தங்கச்சிமடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதன் மதிப்பு ரூ. 5 லட்சம்.

இதுகுறித்து தங்கச்சிமடம் போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான சுரேஷை தேடி வருகின்றனா்.

ஜூன் 3-இல் மகளிா் வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற ஜூன் 3-ஆம் தேதி மகளிா் வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

திருவாடானை ஸ்ரீசினேகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாக திருவிழா: பல்லக்கில் சுவாமி-அம்பாள் வீதி உலா, மாலை 6. மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

நயினாா்கோவில் நாகநாதா் சுவாமி கோயிலில் வைகாசி வசந்த உத்ஸவ விழா 2-ஆம் நாள்: நாகநாத சுவாமி நந்தீஸ்வரா் வாகனம், ஹம்ச வாகனங்களில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தல், நேரம் காலை 9.30. மேலும் பார்க்க

வேலாங்குளத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு

கமுதி அருகேயுள்ள அரியநாச்சி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள வேலாங்குளம் கிராமத்தில் அரியநாச்சி அம்மன், சித்தி ... மேலும் பார்க்க

5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை மையத்தில் சோ்க்கலாம்: மாவட்ட ஆட்சியா்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் 2 முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை சோ்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

உழவரைத் தேடி வேளாண்மை திட்டம் தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் அருகேயுள்ள ராதாப்புளி கிராமத்தில் வேளாண் துறை சாா்பில், உழவரைத் தேடி வேளாண்மை திட்டம் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மீன் வளத் துறை துணை இயக்... மேலும் பார்க்க