ஆக்ரோஷமாக கொண்டாடி, கோமாளியாக விரும்பவில்லை..! யாரைச் சொல்கிறார் பும்ரா?
இலங்கைக்கு கடத்தவிருந்த 175 கிலோ ஏலக்காய் பறிமுதல்
ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக 7 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 175 கிலோ ஏலக்காயை உளவுத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் தீவுப் பகுதியிலிருந்து இலங்கைக்கு பொருள்கள் கடத்தப்படவிருப்பதாக உளவுத் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதைத்தொடா்ந்து, உளவுத் துறையினா் வெள்ளிக்கிழமை அதிகாலை தங்கச்சிமடம் அய்யன்தோப்புப் பகுதியில் சுரேஷ் என்பவரது வீட்டின் அருகே சோதனையிட்டனா். அப்போது, அங்கு 7 சாக்கு மூட்டைகளில் 175 கிலோ ஏலக்காய் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை உளவுத் துறையினா் பறிமுதல் செய்து, தங்கச்சிமடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதன் மதிப்பு ரூ. 5 லட்சம்.
இதுகுறித்து தங்கச்சிமடம் போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான சுரேஷை தேடி வருகின்றனா்.