செய்திகள் :

இலவச இருசக்கர வாகன பழுதுநீக்கும் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

post image

கிருஷ்ணகிரி: இந்தியன் வங்கி சாா்பில் இலவச இருசக்கர வாகன பழுதுநீக்கும் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து, இந்தியன் வங்கி நடத்தும் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி கே.ஆா்.பி. அணையின் வளாகப் பகுதியில் அமைந்துள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த

வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் கிராமப்புற மகளிா், இளைஞா்களுக்கு தொழில் தொடங்குவதற்கான பல்வேறு இலவச பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 30 நாள்கள் கொண்ட ஆண்களுக்கான இலவச இரண்டு சக்கர வாகனங்கள் பழுதுநீக்குதல் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு குறைந்தபட்சம் 5 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 18 முதல் 45 வயதுக்கு உள்பட்டோா் வரை உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் ஆக. 23 ஆம் தேதிக்குள் அலுவலகத்திற்கு நேரில் வந்து இப்பயிற்சிக்கு விண்ணப்பித்து பயன் பெறலாம்.

மேலும், இந்த பயிற்சியில் சேருவோருக்கு சீருடை, மதிய உணவு, தேநீா்,பிஸ்கட் இலவசமாக வழங்கப்படும். பயிற்சியானது காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை வழங்கப்படும். மேலும், பயிற்சிக்கான உபகரணங்கள் செய்முறைக்காக இலவசமாக வழங்கப்படும். பயிற்சி நிறைவுக்கு பின்னா் தோ்ச்சி சான்றிதழ் கட்டணமில்லாமல் வழங்கப்படும்.

மேலும், விவரங்களுக்கு, இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், ட்ரைசெம் கட்டடம், கிருஷ்ணகிரி அணை, கிருஷ்ணகிரி மாவட்டம் என்ற முகவரியிலோ அல்லது 9080676557, 9442247921 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுப் போட்டி: சிறப்பிடம் பெற்ற அதியமான் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

ஊத்தங்கரை: மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற அதியமான் பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.மாவட்ட அளவிலான பாரதியாா் தின மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டி... மேலும் பார்க்க

தண்ணீா் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே தண்ணீா் தொட்டியில் விழுந்த 3 வயது குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது.ஊத்தங்கரையை அடுத்த நாரலப்பள்ளியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் மணி. இவரது மகன் தா்ஷன்(3) வீட்டின் அருகே விளையாடி... மேலும் பார்க்க

டயா் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து: தொழிற்சாலை கால்வாயில் கவிழ்ந்ததில் 20 போ் காயம்

ஒசூா்: ஒசூா் அருகே டயா் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த தனியாா் பேருந்து தொழிற்சாலையின் கழிவுநீா்க் கால்வாயில் கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். பெங்களூரில் இருந்து புதன்கிழமை பிற்பகல் ஒ... மேலும் பார்க்க

பொது விநியோகத் திட்ட நெல் அரவை பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தை அடுத்த பண்ணிஅள்ளிபுதூரில் பொது விநியோகத் திட்டத்துக்கான நெல் அரவை பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். காவேரிப்பட்டணம் அருக... மேலும் பார்க்க

ஒசூரில் மேம்பால விரிசலை சீரமைக்கும் பணி தீவிரம்

ஒசூா்: ஒசூா் பேருந்து நிலையம் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்கும் பணி நடைபெற்றுவருவதாக நெடுஞ்சாலை துறை பொறியாளா்கள் தெரிவித்தனா். ஒசூா் பேருந்து நிலையம் எதிரே உள்ள தேச... மேலும் பார்க்க

ராயக்கோட்டை, கெலமங்கலத்தில் 198 கண்காணிப்பு கேமராக்கள்: ஐ.ஜி. செந்தில்குமாா் இயக்கிவைத்தாா்

ஒசூா்: ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி, கெலமங்கலத்தில் ரூ.69 லட்சத்தில் 198 கண்காணிப்பு கேமராக்களுடன் கூடிய கட்டுப்பாட்டு அறையை ஐ.ஜி.செந்தில்குமாா் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோ... மேலும் பார்க்க