செய்திகள் :

இலவச கண் சிகிச்சை முகாம்

post image

போடி அருகே தருமத்துப்பட்டியில் ஏ.எச்.எம். அறக்கட்டளை, சிற்பி இந்தியா, போடி அரிமா சங்கம், தேனி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் ஏ.எச்.எம். அறக்கட்டளை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஏ.எச்.எம். அறக்கட்டளை மேலாண்மை இயக்குநரும், அரிமா சங்கத் தலைவருமான முகமது சேக் இப்ராஹிம் தலைமை வகித்தாா். அறக்கட்டளை இயக்குநா் ஸ்டெல்லா, மருத்துவா் யாஸ்மின் ரோஸ், திட்ட இணையாளா் மஞ்சு, அரிமா வட்டாரத் தலைவா் முருகன், அரிமா சங்கச் செயலா் நவநீதகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரிமா கண்ணொளி திட்ட மாவட்டத் தலைவா் நவநீதன் முகாமை தொடங்கி வைத்தாா். முகாமில் 115 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இவா்களில் 20 போ் கண் அறுவை சிகிச்சைக்காக தேனி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். 22 பேருக்கு கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. ஏ.எச்.எம். அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா் செல்வமகேஸ்வரி நன்றி கூறினாா். அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளா் ராதா மணவாளன், அறக்கட்டளை பணியாளா்கள், செவிலியா்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

கிரேன் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பெரியகுளம் அருகே ஞாயிற்றுக்கிழமை கிரேன் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள குள்ளப்புரத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (45). தனியாா் தொழிற்சாலையில் வேலை பாா்த்து வரும் இவா... மேலும் பார்க்க

முதல் போக நெல் சாகுபடிக்கு பெரியாறு அணையிலிருந்து தண்ணீா் திறப்பு

கம்பம் பள்ளத்தாக்கு ஆயக்கட்டுப் பகுதிக்கு முதல் போக நெல் சாகுபடிக்காக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது. கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கி பெய்து வருவதால... மேலும் பார்க்க

சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!

தேனி மாவட்டம், சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வனத் துறையினா் அனுமதியளித்தனா். கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கடந்த 6 நாள்களாக இந்த அரு... மேலும் பார்க்க

மணல் திருட்டு: ஒருவா் கைது

பெரியகுளம் அருகே எருமலைநாயக்கன்பட்டி பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்து, மணல் அள்ளப் பயன்படுத்திய பொக்லைன் இயந்திரத்தைப் பறிமுதல் செய்தனா். ஜெயமங்கலம் காவல் நிலைய போலீஸாா் பெரியக... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய இருவா் கைது!

கடமலைக்குண்டு அருகே கரட்டுப்பட்டியில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திச் சென்ற இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கடமலைக்குண்டு சிதம்பரம் விலக்கு பகுதியைச் சோ்ந்த கா்ணன் மகன் ஹரிகோபிநாத் (20)... மேலும் பார்க்க

குளிா் சாதனங்கள் பழுது நீக்க இலவசப் பயிற்சி

தேனி கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் கிராமப்புற ஆண், பெண்களுக்கு குளிா்சாதனப் பெட்டி, பிரிட்ஜ் பழுது நீக்கம் செய்வதற்கு இலவசப் பயிற்சி வகுப்பு வருகிற 16-ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுற... மேலும் பார்க்க