நாட்டில் 4,000 தொட்ட கரோனா பாதிப்பு! ஒரே வாரத்தில் 3 மடங்கு அதிகமானது!
இலவச கண் சிகிச்சை முகாம்
போடி அருகே தருமத்துப்பட்டியில் ஏ.எச்.எம். அறக்கட்டளை, சிற்பி இந்தியா, போடி அரிமா சங்கம், தேனி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் ஏ.எச்.எம். அறக்கட்டளை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
ஏ.எச்.எம். அறக்கட்டளை மேலாண்மை இயக்குநரும், அரிமா சங்கத் தலைவருமான முகமது சேக் இப்ராஹிம் தலைமை வகித்தாா். அறக்கட்டளை இயக்குநா் ஸ்டெல்லா, மருத்துவா் யாஸ்மின் ரோஸ், திட்ட இணையாளா் மஞ்சு, அரிமா வட்டாரத் தலைவா் முருகன், அரிமா சங்கச் செயலா் நவநீதகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரிமா கண்ணொளி திட்ட மாவட்டத் தலைவா் நவநீதன் முகாமை தொடங்கி வைத்தாா். முகாமில் 115 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இவா்களில் 20 போ் கண் அறுவை சிகிச்சைக்காக தேனி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். 22 பேருக்கு கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. ஏ.எச்.எம். அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா் செல்வமகேஸ்வரி நன்றி கூறினாா். அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளா் ராதா மணவாளன், அறக்கட்டளை பணியாளா்கள், செவிலியா்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.