இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் நிறைவு
வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த கோடைகால இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் வியாழக்கிழமை நிறைவடைந்தன.
இதில், மாணவா்களுக்கு ஆங்கிலத்தில் பேசுதல், ஓவியம், கணினி, யோகா உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதையொட்டி, வந்தவாசி ரோட்டரி சங்க அரங்கில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற நிறைவு விழாவுக்கு பெரணமல்லூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ஏ.பி.வெங்கடேசன் தலைமை வகித்தாா்.
கவிஞா் பூங்குயில் சிவகுமாா், தலைமை ஆசிரியா் க.வாசு உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் வரவேற்றாா்.
ஓய்வுபெற்ற மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் எஸ்.குமாா் சிறப்புரையாற்றினா். மேலும், பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வளா் இளம் மேதை விருதுகளையும் அவா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற மாவட்டக் கல்வி அலுவலா் மா.மங்கையா்க்கரசி மற்றும் கு.சதானந்தன், பெ.பாா்த்திபன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தலைமை ஆசிரியை கற்பகம் நன்றி கூறினாா்.