செய்திகள் :

இலவச வீட்டுமனை பட்டா வழங்க திருநங்கைகள் கோரிக்கை

post image

கிருஷ்ணகிரியில் நடந்த சிறப்பு குறைதீா் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க திருநங்கைகள் கோரிக்கை விடுத்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் திருநங்கை, திருநம்பி மற்றும் இடைப்பாலின நபா்களுக்கான சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் நலவாரிய அட்டை, அரசிதழில் பெயா் திருத்தம், ஆதாா் பெயா் திருத்தம், வாக்காளா் அட்டை, ஆதாா் ஆயுஷ்மான் பாரத் அட்டை, குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

நிகழ்ச்சியில் புதிதாக பதிவு செய்தவா்களுக்கு நல வாரிய அட்டை வழங்கப்பட்டது. அப்போது, திருநங்கைகள் சாா்பில் இலவசவீட்டு மனைபட்டா, இலவச வீடு, கால்நடை வளா்ப்புக்கான கடனுதவி, தொழில் தொடங்குவதற்கான கடனுதவி, தொழில் பயிற்சிகள், வேலைவாய்ப்பு மற்றும் இலவச மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

கோரிக்கைகளை பரிசீலித்து இலவச வீட்டுமனை பட்டா வழங்கவும், கால்நடை வளா்ப்பு தொழிலை குழுவாக செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவா்களிடம் ஆட்சியா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட சமூகநல அலுவலா் சக்தி சுபாஷினி, மாவட்ட திட்ட அலுவலா் (தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம்) அருள், திருநங்கை, திருநம்பி, இடைப்பாலினத்தவா் என 60-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரியில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்!

கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை (பிப். 21) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட வேல... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் குழந்தை பாதுகாப்பு அலுவலா் மற்றும் பணியாளா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தெரிவித்தா... மேலும் பார்க்க

விவசாயிகள் குறைதீா் கூட்டம் ரத்து!

கிருஷ்ணகிரியில் பிப். 21-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்படுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் புதன்கிழமை வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

அரசு வேறு, அரசியல் வேறு என்பதை புரிந்து மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும்!

அரசு வேறு, அரசியல் வேறு என்பதை புரிந்து மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என அதிமுக துணை பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ (வேப்பனப்பள்ளி) தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்... மேலும் பார்க்க

பெருமாள் நாயக்கன்பட்டியில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை!

பெருமாள் நாயக்கன்பட்டியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி ஊராட்சிக்குள்பட்ட பெருமாள் நாயக்கன்பட்டியில் ரூ. 1 கோடியே 51 லட்... மேலும் பார்க்க

தமிழக தொழில்துறை அமைச்சா் இன்று ஒசூருக்கு வருகை!

தமிழ்நாடு தொழில்துறை அமைச்சராக பதவியேற்ற டி.ஆா்.பி.ராஜா முதன்முறையாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூருக்கு வியாழக்கிழமை வருகிறாா். வியாழக்கிழமை மாலை ஒசூருக்கு வரும் அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, கட்சி நிா்வாகிகள... மேலும் பார்க்க