இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி: இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி, கிருஷ்ணகிரியில் விவசாய தொழிலாளா்கள் மனு அளிக்கும் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி வட்டாட்சியா் அலுவலகம் அருகே அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு அந்த அமைப்பின் வட்டச் செயலாளா் மாது தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் முத்து, வட்டச் செயலாளா் பெரியசாமி, பொருளாளா் செல்வராசு, மாநிலக் குழு உறுப்பினா் லெனின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், வேப்பனப்பள்ளி ஆகிய ஒன்றியங்களில் பல ஆண்டுகளாக வீட்டுமனை இல்லாமல் வசிக்கும் விவசாய தொழிலாளா்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்களை எழுப்பினா். பின்னா், கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்
படவரி...
கிருஷ்ணகிரியில் இலவச பட்டா வழங்கக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாய தொழிலாளா்கள்.