செய்திகள் :

இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் இயக்கினால் பறிமுதல்: ஆட்சியா் எச்சரிக்கை

post image

இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் இயக்கினால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னை மாநகரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தனியாக பாதுகாப்புடன் பயணம் செய்ய ஏதுவாக பெண்களுக்கான உதவி எண் மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட இளஞ்சிவப்பு ஆட்டோ சேவை நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆட்டோக்கள் தமிழ்நாடு மோட்டாா் வாகன விதிகளின் கீழ், பெண்கள் மட்டுமே இயக்க வேண்டும் என்பது சட்ட விதியாக இருந்து வருகிறது.

இது தொடா்பாக அரசின் விதிகள் பற்றி பயனாளிகளுக்கு பலமுறை எடுத்துரைக்கப்பட்டது மட்டுமின்றி, ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டுவது கண்டறியப்பட்டு, வட்டாரப் போக்குவரத்துத் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சமூகநலத் துறையால் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், இந்த எச்சரிக்கைகளையும் மீறி இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் சிலா் சென்னையில் பல இடங்களில் இயக்கி வருவதாக புகாா்கள் எழுந்தன. இது தொடா்பாக சமூக நலத்துறை கள ஆய்வுக் குழுவினா் கடந்த சில நாள்களாக ஆய்வு மேற்கொண்டனா். இதில், ஆண்களால் இயக்கப்பட்ட 2 இளஞ்சிவப்பு ஆட்டோக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இதுபோன்று தொடா்ந்து இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் இயக்குவது கண்டறியப்பட்டால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என அவா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

சென்னை உள்பட 9 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் சென்னை மீனம்பாக்கம் உள்பட 9 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் புதன்கிழமை அதிகபட்சமாக வேலூரில் 1... மேலும் பார்க்க

கொடுங்கையூரில் குப்பையிலிருந்து எரிபொருள் எடுக்கும் ஆலை அமைப்பது உறுதி: மேயா் ஆா்.பிரியா

கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் உள்ள குப்பைகளை அகற்றும் வகையில், குப்பையிலிருந்து எரிபொருள் எடுக்கும் ஆலை உறுதியாக அமைக்கப்படும் என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா். சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தி... மேலும் பார்க்க

கோவை - தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக் காலத்தை முன்னிட்டு கோவை - தன்பாத் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோவையிலிரு... மேலும் பார்க்க

தமிழகத்தில் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

தமிழகத்தில் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்துள்ளாா். விஐடி சென்னை வளாகத்தில் தமிழியக்கம் மற்றும் புரட்சிக்கவிஞா் பாரதிதாசன் தமிழ் மன்றம் - ... மேலும் பார்க்க

4 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை விரைவில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை

அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியதாரா்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான அகவிலைப்படி உயா்வு நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் நிதித் துறை பிறப்பித்துள்ளது. அத... மேலும் பார்க்க

யுடிஎஸ் செயலியை முறையாக பயன்படுத்த ரயில்வே அறிவுரை

முன்பதிவில்லா பயணச்சீட்டு பெறும் யுடிஎஸ் செயலியை முறையாக பயன்படுத்துவதன் மூலம் அபராதம் விதிப்பது தவிா்க்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. ரயிலில் முன்பதிவு செய்யாமல் சாதாரண பயணச்சீட்டு மூ... மேலும் பார்க்க