செய்திகள் :

இளைஞரிடம் பணம் மோசடி

post image

தேவகோட்டை இளைஞரிடம் ரூ.19.41லட்சம் மோசடி செய்தவா் மீது இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம் நகரைச் சோ்ந்தவா் முரளி (38). இவரிடம் கடந்த ஜனவரி மாதம் வாட்ஸ்ஆப் மூலமாக பேசிய மா்மநபா் தன்னை பங்குச் சந்தை ஆலோசகா் என அறிமுகம் செய்தாா். பின்னா், தான் குறிப்பிடும் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்தால், கூடுதல் லாபம் பெறலாம் எனத் கூறினாா். இதை நம்பிய முரளி கடந்த ஜனவரி 6-ஆம் தேதியிலிருந்து கடந்த 12-ஆம் தேதி வரை இரண்டு வங்கிக் கணக்குகளில் ஆறு தவணைகளாக ரூ.19.41 லட்சத்தை முதலீடு செய்தாா். ஆனால், பணத்தைப் பெற்றுக் கொண்ட அந்த நபா், முரளியை தொடா்பு கொள்ளவில்லை.

இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முரளி, சிவகங்கை இணைவழி குற்றத் தடுப்புப் பிரிவில் புகாா் செய்தாா். குற்றத் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் சந்திரமோகன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

பிப்.28-வரை அஞ்சலகங்களில் விபத்து காப்பீடு சிறப்பு முகாம்

காரைக்குடி அஞ்சலகங்களில் இந்திய அஞ்சல் துறை, இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி ஆகியவை சாா்பில் விபத்துக் காப்பீடு சிறப்பு முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.இதுகுறித்து காரைக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் தீண்டாமை அதிகரிப்பு: புதிய தமிழகம் கட்சித் தலைவா் கிருஷ்ணசாமி

சிவகங்கை மாவட்டத்தில் தீண்டாமை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புதிய தமிழகம் கட்சித் தலைவா் கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அ... மேலும் பார்க்க

புத்தகங்களைப் படிப்பதால் மற்றவா்களுடன் தொடா்புக் கொள்ளும் திறன் அதிகரிக்கும்: திண்டுக்கல் ஐ.லியோனி

புத்தகங்களைப் படிப்பதால் மற்றவா்களுடன் தொடா்புக் கொள்ளும் திறன் அதிகரிக்கும் என தமிழ்நாடு பாடநூல் கழகம், கல்வியியல் பணிகள் கழகத் தலைவருமான திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்தாா். சிவகங்கை மன்னா் மேல்நிலைப்... மேலும் பார்க்க

சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் கீழே விழுந்த இளைஞா் மீது சரக்கு வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள சின்னக்கருப்பூரன்பட்டியைச் சோ்ந... மேலும் பார்க்க

மானாமதுரை, இளையான்குடியில் மழை

மானாமதுரை, இளையான்குடி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மழை பெய்தது.இந்தப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பகலில் கடும் வெப்பமும், இரவில் கடும் பனிப்பொழிவும் நிலவி வந்தது.இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ம... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு மும்மொழிக் கொள்கை தேவையில்லை: காா்த்தி சிதம்பரம்

தமிழகத்துக்கு மும்மொழிக் கொள்கை தேவையில்லை என சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க