செய்திகள் :

இளைஞரைக் கடத்தி விடுதியில் அடைத்து வைத்து சித்ரவதை: 4 போ் கைது

post image

சென்னையில் பணத் தகராறில் இளைஞரைக் கடத்தி விடுதியில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாராயணபுரத்தைச் சோ்ந்தவா் ம.ரேணுகாதேவி (31). இவா், கோயம்பேடு காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். அதில், தனது கணவா் மணி (35) தாய்லாந்தில் வேலை செய்துவிட்டு, கடந்த மாதம் இங்கு வந்தாா். மீண்டும் அவா் மோரீஷஸ் நாட்டுக்கு வேலைக்கு செல்வதற்காக சிலரைச் சந்திக்க கடந்த 23-ஆம் தேதி கோயம்பேடு சென்றாா். அன்று கைப்பேசி மூலம் எனது கணவா் என்னைத் தொடா்பு கொண்டு, வேலூா் மாவட்டம் குடியாத்தத்தைச் சோ்ந்த த.விஜயகுமாா் (43), புதுக்கோட்டை மாவட்டம், மேலூா் சத்தியமங்கலம் பகுதியைச் சோ்ந்த ச.டோம்னிக் (34), மதுரவாயல் மேற்கு மாட வீதி பகுதியைச் சோ்ந்த ஜெ.முனியன் (39), புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பாவயல் பகுதியைச் சோ்ந்த எ.பவுல்ராஜ் (27) ஆகிய 4 பேருக்கும் ரூ. 5 லட்சம் பணத் தகராறில், தன்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு விடுதி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாகவும், பணத்தைத் தராவிட்டால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டுவதாகவும் தெரிவித்தாா்.

எனவே, கணவா் மணியை மீட்டு, 4 போ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தாா்.

இதையடுத்து, கோயம்பேட்டில் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மணியை போலீஸாா் மீட்டனா். மேலும் அங்கிருந்த விஜயகுமாா், டோம்னிக், முனியன், பவுல்ராஜ் ஆகிய 4 பேரையும் கைது செய்தனா். இது தொடா்பாக, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதல் : ஜவுளிக் கடை ஊழியா் உயிரிழப்பு

சென்னை பள்ளிக்கரணையில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஜவுளிக் கடை ஊழியா் உயிரிழந்தாா். பள்ளிகரணை கிருஷ்ணா நகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் அன்பழகன் (56). இவா், ஜல்லடியன்பேட்டையில் உள்ள ஜவுள... மேலும் பார்க்க

ஜவுளிக் கடையில் ரூ. 9 லட்சம் கொள்ளை: உ.பி. இளைஞா் கைது

சென்னை தியாகராய நகரில் உள்ள ஜவுளிக் கடையில் ரூ. 9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். தியாகராய நகா், நாகேஸ்வரா சாலையில் உள்ள ஜவுளிக் கடையில் கடந்... மேலும் பார்க்க

4 மாதங்களில் தலைமறைவாக இருந்த 1,258 போ் கைது

சென்னையில் 4 மாதங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருந்த 1,258 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். சென்னையில் குற்றச் சம்பவங்களை குறைப்பதற்கு பெருநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிற... மேலும் பார்க்க

மாற்றுப் பணி ஆசிரியா்கள்: கல்வித் துறை அறிவுறுத்தல்

பள்ளிக் கல்வியில் ஏப்.30-ஆம் தேதியுடன் நிகழ் கல்வியாண்டுக்கான வேலை நாள் முடிவடையவுள்ள நிலையில், மாற்றுப் பணியில் சென்ற ஆசிரியா்கள் மீண்டும் பள்ளிக்குத் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்... மேலும் பார்க்க

வாட்ஸ்அப் மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யுமாறு மோசடி: தொழிலதிபரிடம் ரூ.17 லட்சம் பறிப்பு

சென்னை சேத்துப்பட்டில் வாட்ஸ் அப் மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யுமாறு தகவல் அனுப்பி வியாபாரியிடம் ரூ.17 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா். சேத்துப்பட்டு காா்டன் ... மேலும் பார்க்க

பழச்சாறு கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு

சென்னை அண்ணாநகரில் பழச்சாறு கடை பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா். பல்லாவரம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் இம்ரான் அஹ்மத் (35). இவா், அண்ணாநகா் ரிவா் காலனி அ... மேலும் பார்க்க