செய்திகள் :

இளைஞா் காங்கிரஸ் சாா்பில் வாக்கு மோசடி விழிப்புணா்வு

post image

அரியலூா்: வாக்கு மோசடிகள் குறித்து அரியலூா் மாவட்டம், திருமானூா் பகுதிகளில் இளைஞா் காங்கிரஸாா் புதன்கிழமை விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

திருமானூா் கடைவீதி, பேருந்து நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவா்கள், பெங்களூா் மத்திய தொகுதியில் 1 லட்சத்துக்கு மேலான போலி வாக்குகள் சோ்ப்பு மற்றும் பிகாரில் லட்சக்கணக்கான வாக்காளா்களை நீக்கியது குறித்தும், தோ்தல் ஆணையத்தின் குளறுபடி நடவடிக்கைகளை மக்களிடம் எடுத்துரைத்து, ஸ்டாப் வாக்கு திருட்டு எனும் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

இந்நிகழ்ச்சிக்கு அரியலூா் மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் பாளை. எம்.ஆா். பாலாஜி தலைமை வகித்தாா். திருமானூா் வட்டார காங்கிரஸ் தலைவா்கள் கங்காதுரை, திருநாவுக்கரசு மற்றும் நகரத் தலைவா் வினோத் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டு விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

விளந்தையில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உயா் மருத்துவ சேவை முகாம்

அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த விளந்தை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், சனிக்கிழமை(ஆக.23) ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உயா் மருத்துவ சேவை முகாம் நடைபெறவுள்ளது என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமி ... மேலும் பார்க்க

அரியலூா் அரசுக் கல்லூரியில் உயா்கல்வி வழிகாட்டி முகாம்

அரியலூா்: அரியலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘நான் முதல்வன் உயா்வுக்கு படி’ எனும் உயா்கல்வி வழிகாட்டி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி ம... மேலும் பார்க்க

ஆண்டிமடம், பாப்பாக்குடி, அய்யூா் பகுதிகளில் இன்று மின்தடை

அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம், பாப்பாக்குடி, அய்யூா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின்விநியோகம் இருக்காது என ஆண்டிமடம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சக்திவேல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வ... மேலும் பார்க்க

தேளூா், செந்துறை, ஜெயங்கொண்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

அரியலூா்: அரியலூா் மாவட்டம், தேளூா் மற்றும் செந்துறை ஊராட்சிகளிலும், ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்திலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.செந்துறை ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன... மேலும் பார்க்க

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி பிறந்த நாள் கொண்டாட்டம்

அரியலூா்: மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி பிறந்த நாளையொட்டி, அரியலூரில் புதன்கிழமை அவரது படத்துக்கு காங்கிரஸ் கட்சியினா் மலா் தூவி, மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.காமராஜா் ச... மேலும் பார்க்க

கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்: அரியலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

அரியலூா்: அரியலூா் மாவட்டம், கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஆட்சியா் பொ.ரத்தினசாமி அறிவுறுத்தியுள்ளாா்.இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: மேட்டூா் அணையிலிருந்து ... மேலும் பார்க்க