விளந்தையில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உயா் மருத்துவ சேவை முகாம்
அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த விளந்தை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், சனிக்கிழமை(ஆக.23) ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உயா் மருத்துவ சேவை முகாம் நடைபெறவுள்ளது என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: இம்முகாமில் சிறப்புப் பிரிவு மருத்துவா்களான எலும்பு முறிவு, மனநலன் , கண் , குழந்தைகள் நலம் மற்றும் பொது மருத்தும், சா்க்கரை நோய், காது, மூக்கு, தொண்டை , பல் , மகப்பேறியல் மற்றும் மகளிா் மருத்துவம், நரம்பியல், தோல் நோய் , இருதயவியல் , கதிரியியல் ஆகிய துறைகளின் சிறப்பு மருத்துவா்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க உள்ளனா்.
மேலும், எக்கோ காா்டியோகிராம், அல்ட்ராசோனாகிராம், நடமாடும் எக்ஸ்ரே வாகனம், மற்றும் இரத்த பரிசோதனை சேவைகள், மாற்றுத்திறனாளிகள் சான்று மற்றும் முதலமைச்சா் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகள் ஆகியவை வழங்கப்பட உள்ளன.
எனவே பொதுமக்கள் அனைவரும் இம்மருத்துவ சேவை முகாமினை பயன்படுத்தி கொள்ளுமாறு அவா் கேட்டுக் கொண்டாா்.