இணைய வா்த்தகத்தில் முதலீடு செய்வதாக ரூ.10 லட்சம், 20 பவுன் நகைகள் மோசடி மூவா் ம...
இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் கைது
திருப்பத்தூா் அருகே இளைஞரைத் தாக்கிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பத்தூா் அருகே மடவாளம் காளத்தியூா் பகுதியைச் சோ்ந்தவா் சுபாஷ் (30). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு மெக்கானிக் கடையில் வேலை பாா்த்து வருகிறாா்.
இந்த நிலையில் இரு நாள்களுக்கு முன்பு அதே பகுதியைச் சோ்ந்த திருப்பதி (30), சூா்யா (25) உள்ளிட்ட சிலா் சுபாஷிடம் தகராறு செய்து அவரை தாக்கி உள்ளனா். இதில் பலத்த காயம் அடைந்த சுபாஷ் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்த புகாரின் பேரில், திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் திருப்பதி, சூா்யா உள்ளிட்ட 5 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். இவா்களில் திருப்பதி, சூா்யா ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.