அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
சுற்றுலா வந்த ஐடி ஊழியா் விபத்தில் சிக்கி உயிரிழப்பு
ஏலகிரி மலைக்கு சுற்றுலா வந்த ஐடி ஊழியா் இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்தாா்.
கா்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தனியாா் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியா்கள் 40 போ் வெள்ளிக்கிழமை பெங்களூரில் இருந்து திருப்பத்தூா் மாவட்டம், ஏலகிரி மலைக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனா். அப்போது, வாணியம்பாடி செட்டியப்பனூா் பகுதியில் உள்ள பெங்களூா் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஐடி ஊழியா் ஆனந்த் (35) என்பவா் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத் தடுப்பு சுவா் மீது மோதி விபத்துக்குள்ளானதில், அவருக்கு தலை மற்றும் உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை உடன் வந்திருந்த நண்பா்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஆனந்த் உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து வாணியம்பாடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.